Saturday 31 December 2011

சென்று வா சென்ற ஆண்டே...!

சென்று வா சென்ற ஆண்டே...!

கடந்த ஆண்டு
உன்னிடம் கேட்டதைதான்
இந்த முறையும் கேட்கிறேன்,

கொஞ்சம் சந்தோஷம்,
நிறைய நிம்மதி
கொண்டு வா...!

ஒவ்வொரு முறை
உன் பிறந்த நாளுக்கு
சபதம் ஏற்க வேண்டும்
என்பதைதான் 
சபதமாக கொண்டிருக்கிறேன்,

இதுவரை  ஏற்ற
சபதத்தை சட்டை செய்வதே இல்லை,

அப்படி என்ன
நீ,
புதியதாய்
பிறக்க போகிறாய்,
உன் பெயரை
மட்டும் மாற்றிக்கொண்டு
மீண்டும் நீதானே
வந்து தொலைக்க போகிறாய்...!

செல்லும் நேரத்தில்
புயலை கிளப்பி,
எங்கள் உயிரை
உன் பையில்
போட்டு செல்லும்
உன் பிறந்த நாளுக்கு 
நான் ஏன்
பிறருக்கு வாழ்த்துக்கள்
சொல்ல வேண்டும்..?

இருந்தாலும் கூட 
நீ ஒரு,
"சமத்துவமான விழா"

மனிதர்கள்
ஜாதி,மதம்,மொழி

அனைத்தையும் கடந்து
கட்டித்தழுவுவது
உன் பிறந்த நாளுக்கு மட்டும் தான்...!

உலகமே
கொண்டாடும் 
ஒரு
"சமத்துவ விழா"
உன் பிறந்த நாள் மட்டும் தான்,

ஒரு நாள்
உலக மக்களை
மனிதர்களாய்
மாற்றும்
உன் சக்திக்கு,
தலை வணங்குகிறேன்...!

இப்போது சொல்கிறேன்
உனக்கு " பிறந்த நாள் வாழுத்துக்கள் "....

"சுனாமியையும்", "தானே" வையும்
எங்களுக்கு
தந்திடாமல்,
தனித்தன்மையாய்,
இருந்து விட்டு போ..!

தாழ்மையுடன்
கேட்கிறோம்...!

சென்று வா சென்ற ஆண்டே...!

கொஞ்சம் சந்தோஷம்,
நிறைய நிம்மதி
கொண்டு வா...!

            - பிரகாஷ் பாரதி

No comments:

Post a Comment