அன்று நிச்சயம் அவர்கள்
நிம்மதியாய் உறங்கி இருப்பார்கள்,
மூச்சு முட்டியபோதும்
மூத்திரப்பை சுமந்து
முற்போக்கு பேசிய,
கிழவனின் முகத்தில்
சிறுநீர் கழித்த நிம்மதியில்,
அன்று நிச்சயம் அவர்கள்
நிம்மதியாய் உறங்கி இருப்பார்கள்,
தன் முலை மறைக்க
முடியாமல்
வீட்டு மூலையில்
முடங்கிக் கிடந்த
பெண்கள் வீதிக்கு வர
செருப்பாய் தேய்ந்த
அந்த கிழவனை
செருப்பால் அடித்தார்கள்,
அன்று நிச்சயம் அவர்கள்
நிம்மதியாய் உறங்கி இருப்பார்கள்,
ஆம் அவர்கள்
அன்று நிம்மதியாய்
உறங்கி இருப்பார்கள்
இன்று நிமதியாய் உறங்குகிறார்கள்,
அடிமைப் போர்வையோடு
நாளைய உறக்கம் விற்று..!!
செருப்பால் அடியுங்கள்
எச்சில் உமிழுங்கள்
சிறுநீர் கழியுங்கள்
மலம் கூட கழியுங்கள்..
பாவம் உங்களுக்கு
தெரிந்ததை அவைதான்
செய்யுங்கள் ,
ஒன்று மட்டும் உண்மை
மூட எண்ணங்கள்
மூச்சற்றுப்போக
மூத்திர சட்டி ஏந்திய
ஈரோட்டுக் கிழவன்
ஈடு இணை இல்லாதவன்..!
தமிழ் வரலாற்றில்
அழிக்க முடியாதவன்..!!
- இளையபாரதி