Monday 31 March 2014

சிவப்பு பிடிக்குமென்று
அதையே உடுத்துகிறாய்,
அழுதே சாகின்றன
பச்சையும் நீலமும் மஞ்சளும்...!💖💖
                            - இளையபாரதி

Thursday 13 March 2014

உன் மார்பை மறைக்கும்
உன் புடவையின்
அந்த பகுதி மட்டும்
உன்னை போலவே
திமிராக திரிவது ஏனடி...??♥♥
                     
                               - இளையபாரதி

Friday 7 March 2014

கனவுக் கால்..!!!


கனவுக் கால்..!!!

வட்டிக்கு பணம் வாங்கி,
வாங்கி வந்தேன்
வாடகை கால் ஒன்று..!

ஊனமென்றும்,நொண்டியென்றும்
சப்பானியென்றும்,
நையாண்டி நடத்திய
வீட்டாருக்கும்,ஊராருக்கும்,
" நான் நொண்டி அல்ல" என்று
உரக்க சொல்ல,
வாங்கி வந்த
கட்டை கால் அது...!
என் கனவு கால் அது..!

ஒருகாலை எடுத்து விட்டால்
ஒப்பாரி வைப்பேன்னென்று..
ஒய்யாரமாய் காத்திருக்கும்
ஒன்றுமில்லாத கடவுளுக்கு,
ஓங்கி கண்ணத்தில் கொடுப்பதற்கு,
வாங்கிய கால் அது..!

மனிதக் கழிவை கூட
மண்டியிடாமல் கழிக்க
முடியாது என்னால்..
ஒரு கால்..
நான் இரு காலோடு இருந்தால்..?
கழிவையாவது கவலை இல்லாமல்
கழித்திருப்பேன்...
இனி கவலை இல்லை
என் கனவுக்கால் உள்ளது..!

கழிப்பொருளாக கணக்கில்
கொள்ளப்பட்ட நான்..!
மனதால் கொல்லப்பட்ட நான்..!
ஓட்டுக்காக மட்டும்
மதிக்கப்பட்ட நான்...!
இந்த நாகரீக
சமூகத்தால்...
பல பெயர்களில்
அழைக்கப்பட்ட நான்..!

இன்று நாகரீக
பெயர் கொண்டு
அழைக்கபடுகிறேன்..
என் பெயர்
" மாற்று திறனாளி "..!
மாற்று திறனாளியா நான்..??
அல்ல
நானே " திறனாளி "..!

ஒற்றை காலில்
எவ்வளவு தூரம்
கடக்க  முடியும் உங்களால்..??
என்னால் என் வாழ்கையை
கடக்க முடியும்...!!♥

நான் "திறனாளி"..♥
நீங்கள்..????

                                    - இளையபாரதி

Thursday 6 March 2014

விலைமகள்..!!!



விலைமகள்

வேறு வழி இல்லை
வெறுத்து போன வாழ்க்கையில்,

தினமும் வெந்து சாகிறேன்
என் சமயலறையில் அல்ல
என் மெத்தை அறையில்..!

கணவனுக்காய் கனவு கண்டுவைத்த
அதே மலர் மெத்தையில்
மலடாகிக்கொண்டிருக்கிறது
என் உடலும் உள்ளமும்...!

மானம் காத்து சம்பாதித்த
சிலநூறு ரூபாயில்...
நிறைந்தது என் ஒரு வயிறு மட்டுமே...

குடும்ப வயிறை நிறைக்க
குறுக்கு வழியே  சிறந்ததென்று..
தோளில் தோல் பை மாட்டி...
தோள்களை பின்னிழுத்து..
மார்பை முன்னிறுத்தி..
மானம்கெட்டு நான் நடந்த
அந்த நாளில்...
நான் செத்து போனேன்
என் குடும்பம் வாழ..!

சிறகடித்து பறக்க எண்ணியவள்
சிப்பிக்குள் முத்தாய்,
பொத்தி வைத்த
என் தேகத்தை விற்க துவங்கினேன்..
வற்றாத என் தேகம்
இன்று வரிப்புலியாக..!

வியப்பானதுதான் நம் நாடு
மானம் காத்தால் சிலநூறு
மானம் விற்றால் பல ஆயிரம்..!

மார்பை மறைத்த..
என் முந்தானியில்
விந்துக்கறை இருந்தாலும்..
என்ன இது என்று கேட்க்கும்
துணிவில்லை என் அம்மாவிற்கு..!

மகளின் மானம் போனால் என்ன..?
மது இருந்தால் போதும்
என் தந்தைக்கு..!


ஒவ்வொரு மாதமும்
அந்த மூன்று நாள் மட்டுமே
விடுமுறை எனக்கு...

என்னை போன்ற
பிறவிகளுக்காகதான் பாவம் பார்த்து
கடவுள் கொடுத்திருக்கிறான்
இந்த மூன்று நாட்களை..
எங்கள் பிறப்புறுப்பு  ஓய்வெடுக்க...!


மனம் திறந்து பேசினாலும்
மார்பை பார்க்கும்  இந்த
மன்மதன்கள்...
மனைவியில் இல்லாத
எதை கண்டுவிட்டார்கள்..என்னிடம்..??

என் தொடை இடுக்கில்
தொலைந்துபோன எந்த
ஆண்மகனுக்கும்
தெரியவில்லை...
மனைவியை தவிர்த்து
வேறு மெத்தை
ஏறுபவன்..
" ஆண் " அல்ல என்பது..!!!

                                        - இளையபாரதி