Saturday 27 October 2012

" தாத்தா "...!!!




எண்பது வயதை 
எட்டி பார்த்த 
எங்கள் அரசன் உங்களுக்கு 
ஏட்டில் சொல்வதா வாழ்த்து...??

வாழ்த்து சொல்ல 
வயது இல்லை 
வணங்கிவிட தகுதியும் இல்லை 
வாழ வேண்டும் 
உங்களை போல 
வரம் தாருங்கள் 
வாழ்கையை வாழ்க்கையாய்
வாழ...!!!

கலகல சிரிப்பும் 
கள்ளமில்லா மனமும் 
கலங்கடிக்கும் கம்பீர  குரலும்..
கவர்ந்திழுக்கும் கண்களும் 
கொஞ்சம் 
கடனாய் கொடுங்கள்..!

இறைவன் வழி 
நாங்கள்  நடக்க 
இனியவை கூறும் 
இளமை நாயகன் நீங்கள்...!

பலரும் பட்டு பட்டு 
ஏற்கும் விதியை  
பலரும் பட்டு பட்டு 
ஏற்கும் தலைவிதியை  
நீங்கள் குட்டி  பார்த்து 
வாழ்வது எப்படி...?
ரகசியம் சொல்லுங்கள்...

கைத்தடி வைத்து 
காலம் தள்ளும் 
முதியோர்கள் மத்தியில்...
உங்களை வைத்து
கைத்தடி தன்
காலம் தள்ளும் 
தந்திரம்தான் என்ன...??

முடி நரைத்த பின்னும் 
மண்டியிடாத கம்பீரம்..!
ஆயிரம் அர்த்தங்கள் 
சொல்லும் உங்கள் 
ஆழமான விழிகள்...!

அரைகுறை வாழ்கையை 
வாழும் எங்களை போல 
அற்பமான மனிதர்களுக்கு 
நடுவே..,
அமைதியாய் வாழும் 
மாமனிதர் நீங்கள்...!

தாத்தா என்று அழைத்திட 
நெஞ்சம்  மகிழ்ந்தாலும் 
என்பது வயதானால்  
தாத்தாவா என்ன..?
என்று என் மனம் 
என்னை எச்சரிக்கை 
செய்வதுண்டு...!

தாத்தாவை போல 
நடந்துகொண்டால்தானே 
தாத்தா என்று அழைப்பது..!
வயது முதிர்ந்த இளைஞனை 
தாத்தா என்று எப்படி
அழைப்பது..???

ஆனாலும் தாத்தா 
ஒரு சிறு கோபம்
உங்கள் மீது எனக்கு..!
"பொக்கை வாய் " தாத்தா என்று 
செல்லமாக அழைத்திடும் 
பாக்கியம் எங்களுக்கு 
கொடுக்கவில்லை நீங்கள்..!

ஒன்று செய்துவிட்டு 
ஓராயிரம் பேசும் 
ஒப்பனை மனிதர்கள் நடுவே..
ஒவ்வொரு நொடியும் 
ஒரு நன்மை செய்துவிட்டு 
ஒன்றுமே செய்யாததுபோல் 
ஒதுங்கி வாழும் நீங்கள்.!
ஒற்றனா..? அந்த இறைவனுக்கு..??

உண்மை உலகம் 
காண ஆசைப்படுகிறேன் 
உங்கள் மூக்கு கண்ணாடி 
கொடுங்களேன்..!

பூமிக்கும் வலிக்காத 
உங்கள் நடையை 
தன மீதும் 
நடக்க சொல்கின்றன 
மலர் கூட்டம்....

ஆயிரம் கவி சொன்னாலும் 
அற்பமாகதான் போகும்...
அன்பு தாத்தா உங்கள் 
அன்பின் முன்...!

காதலுக்கு கவி எழுதலாம் 
நட்புக்கு கவி எழுதலாம் 
பாசத்திற்கு கவி எழுதலாம் 
ஆனால் 
மாமனிதர்களுக்கு கவி எழுத 
வார்த்தைகளுடன் போராட 
வேண்டி இருக்கிறது...

முதல் மூச்சு 
ஒருமுறை தான் 
பிறந்த பொது...
உங்களுக்கு இது 
இரண்டாம் முதல் மூச்சு...!!!

தாத்தா  நீங்கள் 
இன்னும் நீண்ட நெடும் தூரம்
எங்களை அழைத்து 
செல்ல வேண்டி இருக்கிறது...
உங்கள் விரல் பிடிக்கிறோம் 
எங்கள் கரம் பிடித்து 
அழைத்து செல்லுங்கள் 
கண் மூடிக்கொண்டு 
வருகிறோம் நீங்கள் செல்லும் 
" பாதையில் "...!!!

                                                 - இளையபாரதி 

Sunday 14 October 2012




மகாகவியின் நினைவு நாள் 11-09-2012

எங்கு சென்றாய்..?
எம் தலைவா..?
எம்மை தனியே விட்டு..?

உன் எழுத்தாணி முள்
கீறி சென்ற
உன் நெருப்புக் கவிதைகள்..,
என்னை வளர்த்தன.,

உன் வீர நடையில்
விதைக்கப்பட்டது
விடுதலை...!

உன் விழி
கக்கிய நெருப்பு
காற்றை பொசுக்கிய
உன் சுவாசம்...,

கதகதக்கும்
உன் கருப்பு
கோட்டுக்குளே...
உன்னை
கட்டி அனைத்து..
கண் மூடி இருக்க
வேண்டும் நான்..

நீ வாழ்ந்த
காலத்தில் வாழாத..
குறைதான் எனக்கு..!

சரியாக தேர்வு
செய்தது தமிழ் உன்னை..!
தன் இனிமையை
அனைவருக்கும்
விருந்தளிக்கவும்...
தன் ரௌத்திரம்
புரிய வைக்கவும்...!

காலம் சென்றாலும்
காலங்கள் பல கடந்தாலும்
நீ கடைந்தெடுத்த
கவிதைகளை
கரு சுமந்த
தாய் போல..
தமிழ் சுமக்கும்...!!!

" மெல்ல தமிழ் இனி சாகும்"
என்றொரு பேதை உரைத்தான்
என்றாயே தலைவா..!!!
எப்படி சாகும்..???
உன் கவிதைகள்
இருக்கும் வரை..!

தித்திக்கும் " தீ " நீ...!!!

இன்னுமும்
இனிமையாக
கொழுந்துவிட்டு
எரிந்து கொண்டுதான்
இருக்கிறாய்..
எங்கள் இதயங்களில்..!!!

                                  - இளையபாரதி

Sunday 26 August 2012




தவறுகளும்
திருத்தங்களும்
நிறைந்த
இந்த வாழ்க்கையில்..,
தவறாத திருத்தமும்,
திருத்த முடியாத
தவறுமாகிப்போனது
இந்த
" காதல் "...!!!

                            - இளையபாரதி

Wednesday 20 June 2012




பிழைப்புக்கு பாதை தேடி
பட்டணம் வந்த
பரதேசிகளை ...!
பட்டைஇட்டு பகவான்
இவன்  என்று
பிதற்றுகிறீர்...!!!

பெண்ணிடம் சல்லாபம்
கொண்டாடுபவன் கடவுளாம்...!
"கதவை திற காற்று வரட்டும்"
என்று சொல்லி...
உள்ளே அழைத்து
கதவை பூட்டுபவன்
பிரம்மச்சாரியா..??

போதை போதனைகளை
கேட்க்கும் பேதை
மக்களே
பேடிகளை போற்றும்
புண்ணியவான்களே...!

புழுதியில் படுத்துறங்கியது
போதும் போதும்...!

கடவுள் என்பவன்
இருப்பானாயின்
அவனிடம் நாம்  பேச
போலி தூதர்கள் எதற்கு..??

நேரே நம்மிடம் பேசாத
கடவுள் எதற்கு..??

ஆன்மிகம் இன்று
ஆண்மிகமாகிவிட்டது..!!!

மனிதம் மறந்துவிட்டோம்
மனிதர்களையும் மறுத்துவிட்டோம்
மடையர்கள் போதுமென்று...!

காலப்போக்கில் அரசியல்வாதிகள்
கடவுளாக்கப்படலாம்..,
நடிகர்கள் அதற்க்கு
பூசாரிகலாகலாம்...
எப்படி ஆனாலும்
பேதை மக்களே
நீங்கள்
கடவுளுக்கு உண்டியலிலும்
பூசாரிக்கு தட்டிலும்
பிச்சை போட்டு கொண்டுதான்
இருப்பீர்கள்...!!!

அவர்களையே
வணங்கிக்கொண்டு
அதனால் நீங்கள்
வாழ்வதாக நினைத்துக்கொண்டு...!!!

                                          - இளையபாரதி








Tuesday 19 June 2012


இதயத்தின் ஒரு பக்கத்தில்
கசிந்தாலும்..,
மறுபக்கம்....
இதயத்திற்கே தெரியாமல்
சுரப்பதுதான்
" காதல் "...!!!
                               
-இளையபாரதி

Friday 15 June 2012

"......நட்பு......"








நயவஞ்சகமும் நஞ்சும்
மிகுந்த மனங்களுக்கு
நடுவே...
நெஞ்சம் நிமிர்த்தி
தோள்கள் திமிர
நடை போடுகிறது
களங்கமில்லா
நட்பு...!

காதலி
இருந்தும்...
காதலுக்கும் மேல்
காதலிக்கிறார்கள்
நட்பை..!
காதலிகளுக்கு தெரியாமல்...!

ஒருவேளை மனிதனின்
ஆறாம் அறிவு
இந்த நட்பு தானோ..?

"நீரில்லா நெற்றிப் பாழ்" என்கிறது
ஒரு மதம்...
நட்பில்லா மனிதன்
நடை பிணம் தான் உறுதியாக...,

விலங்குகள் அஃறிணை
மனிதர்கள் உயர்திணை
நண்பன் உள்ளவன்
நட்புத்திணை..
உயர்திணையை விட
உயர்வானவன் என்று
"இனி ஒரு விதி செய்வோம்"


நண்பனுக்காய் உயிர் விட்டவர்கள்
இங்கு இல்லை,
காதலை போலே
உயிர் எடுப்பது அல்ல
நட்பு...
உயிர் காப்பது நட்பு...!

"நட்பு"
இதற்க்கு ஒரு
புது காவியம் எழுத
உலக காகிதங்கள் போதாது...!

நன்றி கூறினால் பிடிக்காது
நன்றி எதிர்ப்பார்தலும் ஆகாது
ஆனாலும்
நன்றி மறக்காது
இந்த "நட்பு"...

எதிர்பாராமல் வரும்,
எதிர்பாரா நேரத்தில் உதவும்
எதிர்பார்க்கா இன்பம்
தரும் இந்த "நட்பு"
எதையும் எதிர்பார்ப்பதில்லை
எவரிடமும்..!!!

தனித்துவிடப்படும் தருணத்தில்
தோல் கொடுத்து
தட்டிக் கொடுக்க
தோழனோ ,தோழியோ இருந்தால்
தோற்ற மனிதன்
உலகில் இல்லை..!!!

அன்பானவன்,பண்பானவன்
என்பதைவிட
நட்ப்பானவன் என்று
பெயரெடுப்போம்...
நட்பை வாழ...!!!

- இளையபாரதி
 

Monday 21 May 2012




காதல் கடிதம் எழுத
சொல்லும் கள்ளி !!
எப்படி உனக்கு புரியும்

என் எழுத்து பேசும்
வார்த்தைகள்?

உனக்கு புரிந்தது
நம்
காதல் மொழிதானே?

                     - இளையபாரதி

Thursday 17 May 2012


நீயும் தீவிரவாதிதான் 
என் உயிர் 
கொல்லும் 
உன் வெட்கம்
நீ வைத்திருக்கிறாய் 
ஆயுதமாக..!!!


                - இளையபாரதி

Tuesday 15 May 2012


உன் புன்னகை
மறைத்து நீ
சிரிக்கும்
அந்த வெட்க சிரிப்பைதான்
கடன் கேட்க்கின்றன
மலர்கள்..!!!

- இளையபாரதி

நீ என்னை
கேலி செய்துவிட்டு
சிரிக்கும்
நமட்டு சிரிப்பில்தான்
உன் நாணம்
கண்டேன் நான்..!!!

- இளையபாரதி

கீழ விழுந்த
விண்மீன்,
அண்ணார்ந்து தன
சக விண்மீனை
பார்ப்பது போலதான்
நீ படுத்து கொண்டு
அண்ணார்ந்து பார்ப்பது..!!!

- இளையபாரதி

" க பு மு "




க பு மு என்றாய்
என்ன..? என்றேன்
கட்டி புடிச்சி முத்தம்
என்றாய்..
ஹ ஹ
நீ கட்டி பிடித்தால்
முக்தி அதுதான்
க பு மு என்றேன் நான்..!!!

               - இளையபாரதி

Monday 14 May 2012





விரல் எடுத்து
நீ
கடிக்க
ஏமார்ந்து  போனேன்
நான்
நீ
கடித்தது
உன்
விரல்கள் என்பதால்...!!!

                     - இளையபாரதி


" காகிதப் பூக்கள் "



மனம் இருந்தும்
மறுத்துப்போன உயிரை
கொண்ட உயிரினங்கள்
நாங்கள்..!!!

மணம் இருந்தும்
மணக்க முடியாத
காகித பூக்கள்
நாங்கள்..!!!

முதிர் கன்னி சகோதரிக்கு
திருமணம்,
நோயாளி தந்தைக்கு
மருத்துவம்,
அடுப்பங்கறை அம்மாவிற்கு
கவுரவம்,
இவற்றிற்காக
தாய் மண்ணை
தொலைத்து வந்து
வாழ்கையை தேடும்
காகித பூக்கள்
நாங்கள்...!!!

தாய்  மண்ணை
தொலைத்த
குற்ற உணர்வு
தாயை தொலைத்த
கொடிய உணர்வு..!!!

 காகிதப் பூக்களாய்
இருப்பதில் ஒரே ஒரு
மகிழ்ச்சி எங்களுக்கு
வாடுவதில்லை
" நாங்கள் "...!!!

" நாங்கள் "
எங்கள்
வீட்டில் அடுப்பெரிய
அயல் நாட்டில்
எங்களை எரித்துக்கொள்ளும்
பூக்கள்
" காகிதப் பூக்கள் "

                           - இளையபாரதி

 
நடு நிசியில் 
நட்சத்திரம் சிந்திய 
ஒலி கேட்க 
திரும்பி பார்த்தால்
" நீ " சிரிக்கிறாய்..!!! 

                  - இளையபாரதி
செதுக்கப்பட்ட சிலையில் 
பறிக்கப்பட்ட குழி 
உன் " கண்ணக்குழி " 

                         - இளையபாரதி


உன் கண்மை எடுத்து 
உன் வியர்வை குழைத்து 
வானத்தில் 
வீசியதே 
" வானவில் " ஆகிப்போனது..!!!

                              - இளையபாரதி

Saturday 12 May 2012

நீ நீதான் அம்மா..!!!



" அம்மா "
உன் தொப்புள்கொடி  அறுத்து
உயிர் பெற்ற எனக்கு
தகுதி இல்லை " அம்மா ",

உனக்கு வாழ்த்து சொல்ல
உயிர் கொடுத்த உத்தமியே..

உன்னை போலே
யார் இங்கே..?"அம்மா
கருவாகி,உருவாகி
ஈன்றெடுத்து..
உலகம் காட்டினாய்
என் உலகம்
நீதானே அம்மா..!

உயர உயர பறந்தாலும்
பருந்தாகத
ஊர் குருவி போலதான் " அம்மா "..!
எத்தனை உறவுகள்
வந்தாலும்,இருந்தாலும்
நீ நீதான் அம்மா..!

எத்தனை மென்மையான
பஞ்சு மெத்தையில் உறங்கினாலும்
உன் மடிக்கு
ஈடில்லை அம்மா..

என் தசை,நரம்புகள்
உதிரம் அனைத்திலும்
எழுதப்பட்டுள்ளது
உன் பெயர் அம்மா.. !

என் உயிரின்
சொந்தக்காரி நீ..
என் சுவாசம்
உன்னிடம்
நான் பெற்ற கடன்..!

கவிதை போதாது
உன் பெருமை பேச...

எதை சொல்லி ஈடு செய்ய
எதை கொடுத்து ஈடு செய்ய
" அம்மா "...
என்ன வேண்டும் அம்மா
உனக்கு..??

உயிரா..? அன்பா..?? பாசமா..??
எதை நீ கேட்டாலும்
அது உன்னிடம் நான்
பெற்றதாகத்தான் இருக்கும்
" அம்மா "..!!!

நீ நீதான்
அம்மா என் அம்மா..!!!
தெய்வத்திற்கு தெய்வம்
அம்மா நீ..!!!

நீ நீதான் அம்மா..!!!

                        -    - இளையபாரதி







நீ என்னை
வெட்கத்த்கோடு பார்த்த
முதல் பார்வையில்,
காதலாகிப்போன
அந்த உணர்வு,
நேற்று
நீ என்னை
வேடிக்கையாய் பார்த்தபோது
காலமாகிப்போனது..!!!
                             
                                   - இளையபாரதி

Sunday 6 May 2012

" ஊடல் "



நீ, உன்
உதடுகளை,
சுழித்து
இடப்புறமும்
வலப்புறமும்
அசைத்து,
உன் மூங்கில்
தோள்களை தூக்கி
உன் மயில்,
கழுத்து சுளுக்கிக்கொல்லாமல்,
அசைத்துவிட்டு செல்லும்
அந்த செய்கையை
பார்க்க மட்டுமே
ஒவ்வொரு நொடியும்
உன்னுடன் " ஊடல் "
கொள்வேன் நான்...!!!

                                 - இளையபாரதி

Friday 4 May 2012

கொல்லப்படும் சிசுவின் மரண ஓலம்..!!!




கொல்லப்படும் சிசுவின் மரண ஓலம்..!!!

உங்களால்
நான்  பெற்று
கொள்ளப்படுவேன்
என்று நினைத்தேன்
ஆனால்
பெறாமலே
கொல்லப்பட்டேன்..!அம்மா..!!

கொல்லவா என்னை
சுமந்தாய்..?

அல்லது அடுத்து
பிறக்கப்போகும்
என் தம்பிக்கு
ஒத்திகை
பார்த்தாயா..???

நான் பெண் என
தெரிந்ததால்
என்னை
பிணமாக்கினாய்..!
ஆணாக இருந்திருந்தால்
என்னை
மகனென்று இருப்பாய்..!
வளர்ந்து
நான்
திருநங்கையாகி இருந்தால்
என்ன செய்து இருப்பீர்கள்
அப்பா...??

எந்த ஒரு
பிறப்பிற்கும்
ஆண், பெண்
இருவரும் தேவைதானே..??
பெண்ணை மட்டும்
அழித்துவிட்டால்
ஆண்களை மட்டும்
கொண்டு
கரு தரிக்குமா
இந்த அறிவியல்..???அம்மா..???


எனக்கு கள்ளி பால்
கொடுத்துவிட்டு அழுதீர்களே
அப்பா..!!அம்மா..!!!
பிணமாய் நான்
பிறந்தபின்னாவது
என் உச்சியில்
சிரித்துக்கொண்டே
ஒரே ஒரு
முத்தமிடுங்கள்
பிணம் என்று ஒதுக்காதீர்கள்..!!!
பிணமானாலும்
நான் உங்கள் பிள்ளை..!!!


                          - இளையபாரதி





Thursday 3 May 2012

நின்றிருந்தது " நீ "



மலர் கண்காட்சியில்
குட்டி குழந்தைகள்
ஒரு மலரை
சுட்டி காட்டி
"அந்த பூ
அழகா இருக்கு ",என்று
சொல்லிக்கொண்டிருக்க
திரும்பிப் பார்த்தால்
நின்றிருந்தது
" நீ "
                   
                               - இளையபாரதி

Wednesday 2 May 2012

நாம் நாமாவது எப்போது..???



நாம் நாமாவது எப்போது..???

நாம் நாமாவது எப்போது..???

விபத்தில் சிக்கி
நடுங்கி நடுங்கி
சாக கிடக்கும்
ஓர் உயிரை
வேடிக்கை மட்டும்
பார்த்து செல்லும்
நாம் மனிதனாவதெப்போது..?

சில்லறை சேர்க்க
ஓடிக்கொண்டிருக்கும்
இயந்திர வாழ்வில்
மனிதர்களை நாம்
சேர்ப்பது எப்போது..?

கட்சி வேடமிட்டு
தனிமனிதனுக்கு
வாழ்க முழக்கமிடும்
நாம்,
நம் வாழ்வை
வாழ்வது எப்போது..?

இலவசம் பெற்று
இன்பம் காணும் நாம்,
இலவசங்களை இடறி
அடிப்பது எப்போது..?

இலவசங்கள் நம்மை
சோம்பேறிகள் ஆக்கும்
என மற்றவருக்கு
இசைவது எப்போது..?

குழந்தைக்கு பால்
சுரக்காத மார்பகங்கள்
இருக்கையில்
பால் புட்டி வாங்காமல்
மதிகெட்டு
மதுக் கடைகளில்
மரணத்தை அழைக்கும்
குடி மகன்களே
அவரவர் மனைவியின்
வயிற்றை
நிரப்புவதேப்போது..???


மனைவி இருந்தும்
விபச்சாரி தேடும்
மானம் கேட்டவன்
போல
"தமிழ்" இருக்கையில்
பிற மொழி எதற்கு..?


நம் குடிசைகள்
மாளிகையாவது எப்போது..???

மதுக்கடைகள்
பள்ளிகள் ஆவது எப்போது...???

வாழ்கையை வாழ்வது எப்போது

நம் வாழ்கையை

நான் வாழ்வது எப்போது ..?

நாம் நாமாவது எப்போது..???

                            - இளையபாரதி

Monday 30 April 2012

உழைப்பாளி..!!!



உழைப்பாளி..!!!

இவன்
இன்றி அசையாது உலகு
இவன்  ஊன் சிதைத்து
முதலாளிக்கு
லாபம் கொடுக்கிறான்...

பாவம் இவன்
கனவில் மட்டுமே
வாழ்கிறான்.,
பிள்ளைக்கு படிப்பு வாங்க
இவன்  ரத்தம் விற்கிறான்,

இவன்  தேவை
என்னவென்று தெரியாதே
இவனுக்கு...

இவன்  வாழ்வை
பலி கொடுத்து
பலரை வாழ வைக்கிறான்...!!!

குடும்பத்திற்கும்
நாட்டிற்கும்
வாழ்பவன் இவன்
இவன் வாழ்கையை
உழைத்தே கழிக்கிறான்
உழைப்பாளியை
உண்மையாய்
வணகுவோம்...
உழைத்திடுவோம்...!!!
உழைத்திடுவோம்...!!!

                            - இளையபாரதி

மயங்கினேன்..!!!



எனக்கு
கடவுள் நம்பிக்கை
இல்லை என்றாலும்..,
நீ
கோவிலுக்கு செல்கையில்..,
உன்னை
பின்தொடர்ந்து வந்தேன்...,
நீ
சாமியை பார்த்து
வணங்கினாய்..,
நான்
உன்னை
பார்த்து
மயங்கினேன்...!
நீ
உன் நெற்றியில்
திருநீறு பூசினாய்..!
நானும் பூசினேன்
என் நெற்றியில்
நீ உதறிவிட்ட
பாத மணல்களை...!!!

                             - இளையபாரதி

உனக்கான என் உலகம் ...!!!



உனக்கானதொரு
உலகத்தை
என் உள்ளத்தில்,
எழுப்பி  வைத்து
காத்து கிடந்தேன்,

கை கோர்க்க மறுத்தாய்,
என்னை கடந்து
போனாய்,
கடை விழி பார்வையேனும்
கிடைக்காதா என்று
யாசிக்கும் யாசகன்
ஆனேன் நான்..!

ஏந்திய என் கைகளில்
நீட்டினாய் உன்
அழைப்பிதழை,

விரைவில்
உனக்கு திருமணம்...!!!
அன்று
எனக்கு மறுஜென்மம்..!!!

உனக்காக
எழுப்பிய உலகத்தை
உன் கணவனிடம்
கொடுக்கிறேன்
அவர் உனக்கு கொடுப்பார்..!
மாற்றங்கள் செய்ய வேண்டாம்
என்று சொல்..!!!

உன் தாயை விட
உன் தனித்தன்மை
அறிந்தவன் நான்...

அந்த உலகத்தில்
நீ
விரும்பிய அனைத்தும்
இருக்கும்...
நம் காதலை தவிர..
நம் காதல் இல்லாத
இடத்தில்
எனக்கென்ன வேலை...???

உன் திருமணத்தோடு
மறித்துபோவேன் நான்..

ஆம்
உன் உற்றார்களுக்கும்,உறவினர்களுக்கும்,
நண்பர்களுக்கும்,
அங்கு இலைகளில்
பரிமாறப்பட இருப்பது
என் உயிர்...!!!
நீ
ஏற்கனவே ருசித்துவிட்டாய்
உன்
கணவனுக்கு
ருசிக்க கொடு
என் உயிரை...!!!

                               - இளையபாரதி

Sunday 29 April 2012

என்னை கட்டிக்கொள்கிறேன்..!!!




குழந்தை பருவத்தில்
கட்டிப் போட்டு
வளர்க்கப்பட்டவனாம்
நான்...!
இன்று..,
நானே
என்,
மனதை
கட்டிப் போடுகிறேன்
உன்,
கணவனிடம்
நாம்
காதலித்த கதையை
சொல்லிவிட கூடாதென்று....!!!

                                     - இளையபாரதி

Friday 27 April 2012

கடவுள்..!!! யார் கடவுள்...???





கடவுள்..!!!

இருக்கிறாரா இவர்..?

கடவுள் இருக்கிறார்.!
அவர் எந்த மதத்தை,
சார்ந்தவராகவும் இல்லை
கடவுள்,
கடவுளாகவே இருக்கிறார்...!!!

நானும் பார்த்தேன்
கடவுளை...!!!

பேதம் இன்றி அனைவரையும்
ஏற்றி செல்லும்
பேருந்தில்...!!!

ஒரே மாதிரி
வழி கொடுக்கும்
சாலைகளில்..!!!

ஒரே நிறமாய் இருக்கும்
தண்ணீரில்...!!!

மனிதனாக மட்டும்
நம்மை பார்க்கும்
நம் நாட்டு
தேநீர் கடை
கோப்பைகளில்...!!!


கருங்களுக்கு
பால் ஊற்றி பூசாரி
அபிஷேகம் செய்கையில்
கீழ்வழியும் பாலை
கையில் பிடித்து
குடித்த அந்த யாசகன்
கண்டான்
பூசாரியில் கடவுளை...
பூசாரியோ கண்டார்
கல்லில் கடவுளை.!!!

உணவு கேட்ட,
சிறுவனுக்கு உணவு
கொடுத்து விட்டு
நான் விடைபெறுகையில்
"அண்ணா அங்க இருட்டா
இருக்கு பார்த்து போங்க "
என்ற அந்த சிறுவனிடம்
கண்டேன் நான்
கடவுளை..!!!

கடவுள்
இருக்கிறார் என்றால்,
யார் அவர்
ஏசுவா..?
சிவனா..?
அல்லாவா...?
இவர்கள் கடவுள் என்றால்...
கடவுளை
என்ன சொல்வீர்கள்..?

இங்கே தங்கத்திற்கு
கொடுக்கப்படும்
மரியாதை...,
நமக்கு பெரிதும் உதவும்
இரும்பிற்கு தருவதில்லை...!!!

கடவுள், பணம்
கடவுள் ஒரு கல்...
பணம் வெறும் காகிதம்..
இரண்டுமே
மனிதனால் மதிப்பு
கொடுக்கப்பட்டு...
மதிக்க படுபவைகள்...
ஒரு நாள்
மிதிக்கப்படலாம்...விரைவில்...!!!

கடவுள் இருக்கிறார்.!
அவர் எந்த மதத்தை,
சார்ந்தவராகவும் இல்லை
கடவுள்,
கடவுளாகவே இருக்கிறார்...!!!

அப்படியானால்
யார் கடவுள்...????

உனக்கு நீ
எனக்கு நான்...!!!

                                   - இளையபாரதி




Tuesday 10 April 2012




நீ,
உதவாது
வேண்டாம்...என்று
தூக்கிப்போட்ட
காகிதத்தில் தான்
எழுதினேன்
உனக்கான
என்,
முதல்
கவிதையை...!!
     

                            - இளையபாரதி

Monday 2 April 2012

முதியோர் இல்லத்து முதியவரின் முற்றிய வலிகள்...!!!




முதியோர் இல்லத்து முதியவரின் முற்றிய வலிகள்...!!!

தவமிருந்துதான் பெற்றோம்
உன்னை,
தடுமாறி வாழ்கை நடத்தியபோதும்
தனித்தன்மையாய் வளர்த்தோம்,

உன் எச்சில் பட்ட
என் கண்ணங்கள்
இன்னும் குளிருதாடா..!மகனே...

உன் மழலை புன்னகையை
பிச்சை கேட்டு
பல நாட்கள் உன்னிடம்
மண்டியிட்டிருக்கிறேன் ,
என் செல்ல மகனே...,

உன் பால் வாசத்தில்
என் பாசம் உணர்ந்தேன்,

நீ கடித்து காயபடுத்திய
என் கன்னத்து தழும்பை
இன்னமும் முத்தமிடுகிறாள்
உன் அம்மா...!

என் கிழிந்த வேட்டியை
மறைத்து,மடித்து கட்டி
வேட்டி வாங்கும்
பணத்தில் வாங்கியதுதான்
உன் வெள்ளி பாலாடை...!
என் அன்பு மகனே..!

முதல் முறை
நீ பள்ளி செல்லும்போது
உன்னை மருத்துவனாகதான்
பார்த்தேன் இந்த பாவி..,

கல்லூரி செல்லும்போது
கர்வத்தோடு பார்த்தேன்...,

மணக்கோலத்தில் உன்னை
பார்த்தபோதுதான்,
உயிருடன் மோட்சமான
முதல் மனிதனானேன்..,

என் கடமை முடிந்தது
என் அன்பு மகனே...!

ஓர் இரவு,
வீட்டில் படுத்துவிட்டு
விழித்து பார்த்தால்,
நானும் உன் தாயும்
கிடந்தது
"முதியோர் இல்ல" வாசலில்...,

பேர பிள்ளைகள்
உதைக்க காத்திருந்த
மார்பில்,
நீ உதைத்ததெப்படி..?
என் செல்ல மகனே..!
என் மகன் இப்படி ஆனதெப்படி..?

உன் தாய்
கொடுத்த பால்
விஷமானதெப்படி..?

என் மேல் சிந்திய
உன் எச்சில்
அமிலம் ஆனதெப்படி..?

போதும் மகனே போதும்..!

உயிரை கொல்பவன் மட்டும்
கொலைகாரன் அல்ல...
உணர்வை கொல்பவனும்தான்..,

நீ கொலைகாரன் ஆனதெப்படி...?

நீ செய்ததை
என் உடல் தாங்கும்...
என் உள்ளம் தாங்காது..

நான் தாங்குவேன்
உன் தாய்
தாங்கமாட்டாள்...!
பாலூட்டியவளாயிற்றே...!!!

மகனே..!
வாரம் ஒருமுறை
என் பேரப்பிள்ளைகளை
கூட்டி வா..,
இவர்கள்தான் "தாத்தா பாட்டி"என்று
அறிமுகம் செய்,

"தாத்தா பாட்டி சாமிகிட்ட போய்டாங்க",
என்று கூறி எங்களை
உயிரோடு எரிக்காதே...!

எங்கள் நிலை பார்த்து
உன் பிள்ளைகள்
வளர்ந்தால்தான்,
நீ எங்கள் நிலைக்கு
வராமல் இருப்பாய்..!!!

நீ மிகவும் நல்லவன்
என் செல்ல மகனே..!!!
அனாதையாக எங்களை
விட்டுவிடாமல்,
முதியோர் இல்லத்தில்...
சேர்த்தாயே...!!!

நன்றி மகனே

என் மகன் நல்லவன்...!!!


                                      - இளையபாரதி


Saturday 31 March 2012

" ஈழன் நான் "



ஈழன் நான்,
தமிழ் ஈழன் நான்,

சொர்கமாக்க நினைத்த
என் ஈழ பூமியில்,
சொந்தங்களின் பிணங்களில்,
வாசம் செய்தவன் நான்,

குருதி வழியும்
குழந்தைகளை,
குழிக்குள் புதைப்பதை,
பார்த்துவிட்ட பாவி நான்..!

என்
சகோதரிகளை
கொன்று புணர்ந்தாயே...
ஈனம் கெட்டவனே,
" தமிழச்சி "
உயிருடன் இருந்தால்
புணர விடமாட்டாள்,
என்று கொன்று புணர்ந்தாயோ...?
மானம் கேட்ட
மக்கள் இனமே...!!!

புலியின் தம்பி நான்
எரிந்து மடிந்தேன்
என்று எண்ணினாயோ..??

உயிர்த்தெழுந்தேன்
என் ஈழம் மீட்க,

புலியிடம் இருந்து
தப்புவது சுலபமல்ல,
பசித்த புலி நான்,
ஈழ புலி நான்,
தப்பிக்க கனா கண்டாயோ..?

வந்தேறிகள் எங்களை
ஆட்சி செய்வதா..?
வேசிகள் எங்களுக்கு
வேலி இடுவதா..!!!

ஈன இனமே,
நீ,
ஈழனைக்கொல்வதா..??

என் ஈழம்
மீட்பது சத்தியம்,

ஓடி ஓடி
எங்களை ஒளியவைத்தாயே ..!
நீ ஒளிந்து கொள்ள
இடம் தேடு...!


புறப்பட்டேன்
புறமுதுகு காட்டி ஓடு..!!!



ஒளிந்துகொள்ள
தமிழகம்
வந்துவிடாதே...!!!
எங்கள் தமிழச்சிகள்,
புலி விரட்டவே
" முறம் "பயன்படுத்தினார்கள்..
நரிகளுக்கு
" செருப்பு "...!!!

                                                  ௦- இளையபாரதி





Thursday 29 March 2012

நம் வீடு


நீ,
நடந்த பாதையெங்கும்,
நீ,
மிதித்த 
காலடி மணலை,
சேகரித்து வைத்திருக்கிறேன்,
நாம் வாழ்வதற்கு 
ஒரு வீடு கட்ட,

உன் 
உதிர்ந்த 
கூந்தல் முடி,
சேமித்து அதில் 
கூரை அமைக்கிறேன்,

உன்,
நகத்துண்டுகள்
நம் வீடு 
கட்டும் கற்கள்..,

உன் 
துப்பட்டாக்கள்
நம் 
வீட்டுக் கதவுகள்,

நம் 
வீட்டிற்கு 
விளக்கு எதற்கு..?
உன் 
விழிகள் இருக்கயிலே...?

நீ 
விழி மூடும்போதெல்லாம்
நமக்கு இரவு,

எங்கே கொஞ்சம் 
விழி மூடு 
இரவு கொண்டாடுவோம்...!!!

                                       - இளையபாரதி 







Monday 26 March 2012



உன்,
குலியலரை
கதவுகளின்
பின்னால்
நீ,
ஒட்டி வைத்த
பழைய
அச்சு பொட்டுக்கள்தான்,
என்,
புது சட்டையின்
பொத்தான்களாயின....!!!

                           - இளையபாரதி

Sunday 25 March 2012

என்ன பதில் சொல்ல போகிறாய் தமிழா...???




என்ன பதில்
சொல்ல போகிறாய்
தமிழா...???
உயிர் இழந்த நம்  சொந்தங்களுக்கு..?

மானம் காத்த
தமிழ் மரபு
உன்னால் மானம்கெட்டு போவதா..?
தமிழா இது நீதானா..?

உன் உடலில்
வேறு எவனேனும் புகுந்தானா..?

கொத்துக்கொத்தாய்
நம் சொந்தங்கள்
கொல்லப்படுகயிலே,
"கொலைவெறி"என்று
குத்தாட்டம் போட்டாயே..!!
என்ன பதில்
சொல்ல போகிறாய் ..?

தாயின் மார்பில்
பால் சுரக்காமல்
பிஞ்சிகள் பல
ஈழத்தில் மடிந்த போது,
வந்தேறி நடிகர்களுக்கு
பால் அபிஷேகம் செய்தாயே,
நீ மானம் கேட்டு போனதெப்படி..?

சகோதரிகள் சூரையாடப்படுகயிலே,
சத்தமாய் நீ
பாடல் கேட்டு கிடந்தாயே..!
என்ன பதில்
சொல்ல போகிறாய்
தமிழா...???

தங்கள் உயிர் காக்க
கை நீட்டி,
காப்பாற்றக் கெஞ்சிய
நம் சொந்தங்களின்,
கையை விடுத்து,
" கொலைவெறி " பாடலுக்கு,
கைதட்டி நடனமாட
உன்னால் எப்படி முடிந்தது..??

மானம் போற்றுபவன்
தமிழன்,
மானம் கேட்டவன் அல்ல,
அப்படி மானம் கெட்டுப்போனால்,
அவன் தமிழனே அல்ல...!
நீ எப்படி..?
தமிழனா...???

                                - இளையபாரதி



Friday 23 March 2012





ச்ச்சீ " போடா " என்று
நீ,
என்னை
செல்லமாய்,
திட்டிய போதுதான்,
ஆணாய்,
பிறந்ததில்
கர்வம் கொண்டது
என்
மனது...!!!

- இளையபாரதி

என்,
முகம்
உரசிப்போன
உன்,
துப்பட்டாவிற்கு,
தெரிந்திருக்க
வாய்ப்பிருக்கிறது,
என் "சுவாசம்",
உன் "வாசம்" தான் என்று...!!!

                                        - இளையபாரதி

Wednesday 21 March 2012

" தமிழ்தான் " அழகு...!



நீ,
சேலை கட்டி
எடுத்துக்கொண்ட
புகைப்படத்திற்கும்,
சுடிதார்,
அணிந்து
எடுத்துக்கொண்ட
புகைப்படத்திற்கும்,
பெரிய வித்தியாசம்
ஒன்றும் இல்லை,
சுடிதாரில்
" தமிழ் " பெண்ணாய்,
தெரிகிறாய்...!
சேலையில்
" தமிழாகவே "
தெரிகிறாய்...!
எது அழகு..?
எனக்கு
" தமிழ்தான் " அழகு...!

                                 - இளையபாரதி

Friday 16 March 2012




குறுகுறுவென நீ முறைக்க,
திரு திருவென நான் பார்க்க,
பட பட வென என் இதயம் துடிக்க,
கலகல வென நீ சிரித்தாய்,
சில்சில்லென்று மழையின் போதும்,
மலமலவென  என்னை
நீ கட்டி அணைக்கயிலே...!
திகுதிகுவென என் தேகம் சுட்டதடி,
மடமடவென முத்தமிட்டு ஓடிவிட்டாய்...!
சல்சல்லேன்ற உன் கொலுசுசத்தம்
கேட்டபடியே..,
படபடவென தரையில் வீழ்ந்தேன் நான்...!!!

                                                      - இளையபாரதி


Thursday 15 March 2012

நீ " மலர் "...!!!




கடற்க்கரை மணலில்
உன்னை,
என் முதுகில்
உப்பு மூட்டை
தூக்கிக்கொண்டு
நடந்து செல்கையில் தான்
புரிந்துகொண்டேன்...,
உனக்கு,
ஏன்
" மலர் " என்று
பெயர் வைத்தார்கள் என்று...!!!

                                   - இளையபாரதி

Wednesday 14 March 2012


என்,
வாழ்கையில்...
எப்போதும்
கவிதைகளே
உயிராகிப்போனது ..
எனக்கு...!!!
நீ,
என்னோடு
இருந்த வரை
நீ...!!!
என்னை
நீ,
பிரிந்ததில் இருந்து
நான் எழுதும்
கவிதைகள்...!

                       - இளையபாரதி

Friday 9 March 2012

ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்...

சிறியதாய் எனக்கு அறிவு பரிமாறிய என் ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்...

எப்படி அடைப்பது
உங்களிடம் பட்ட கடனை..?
பணம் கடன் பட்டிருந்தால்...
பணம் கொண்டு அடைக்கலாம்...,
அறிவு கடன் பட்டேன்
எப்படி அடைப்பேன்..?

நீங்கள் அன்று
என்னால் எத்தனை
இன்னல்களை அனுபவித்தீர்கள்..?
இன்று நான்
இன்பமாய் வாழ
வழி வகுத்தீர்கள்..!

சிவாஜி யின்  பாடத்தில்
" வீரம் " போதித்தீர்கள்..!

புத்தனின் பாடத்தில்
" பொறுமை " போதித்தீர்கள்..!

எம் பாரதியின் பாடத்தில்
எல்லாமே போதித்தீர்கள்...!

ஒவ்வொரு பாடம்
எடுக்கும் போதும்
அந்த கதாபாத்திரமாக
திகழ்ந்தீர்கள் இன்னும்
என் கண் முன்னே
நீங்கள் அதே கதாபாத்திரமாய்...!

பள்ளியில் தாயை
பிரிந்த குறை
கண்டதில்லை நான்..!

மாதா, பிதா,குரு, தெய்வம் என்பார்கள்...!
ஆனால்
" குரு " இதில் மாதா,பிதா,தெய்வம்
மூன்றும் சங்கமித்தது எப்படி..?

" குரு " நீங்கள் " குரு " மட்டுமல்ல
என் அறிவின் " கரு "...!

உங்களிடம் அறிவுக் கடன்
பெற்றிருக்கிறேன்,
உங்களுக்கு அறிவுக் கடன்
பட்டிருக்கிறேன் ,
என எப்படிப்
பார்த்தாலும்
அறிவு கடனாளியாக இருப்பது
எனக்கு பெருமையே..!!!

என்
தமிழ் கற்றுக்கொண்டது
உங்களிடம் இருந்தல்லவா...?

சில நேரத்தில்
கடவுளை
வெறுத்தாலும்
உங்களை மட்டும்
வணங்க தோன்றுகிறது...!!!

" குருவே சரணம் "

" குரு "
நீ
என் அறிவின்
" கரு"
                             - இளையபாரதி

Thursday 8 March 2012

"காதல் பலி"



கடவுளின்,
பெயரால்
மூடநம்பிக்கையின்
உச்சமாக,
உயிர் "பலி"
கொடுப்பது போலதான்,
நீ,
கேட்காமலே
என்
இதயத்தை
உனக்கு
"பலி"
கொடுப்பது...!!!
" காதல் " என்னும் பெயரில்...!!!

                                     - இளையபாரதி

Friday 2 March 2012


ஒரு வேளை,
எனக்கே
தெரியாமல்,
போயிருக்கும்....
எனக்கு,
கவிதை
எழுத தெரியும்,
என்று,...!
உன்,
கண்களை
பார்க்காமல்
இருந்திருந்தால்...!!!

                   - இளையபாரதி

Wednesday 29 February 2012

உன்,
உள்ளங்கையில்
வியர்த்துகொண்டே,
இருப்பதாக சொல்லி
சலித்துக்கொள்கிறாய்,
ஆனால்
நானோ....
ஆனந்த தாண்டவமிடுகிறேன்...!
வியர்தால்தானே
என்,
சட்டையில்
துடைக்கிறாய்...
உன் வியர்வையை....!!!
                                - இளையபாரதி

Wednesday 22 February 2012


நீ,
என்னை
பார்க்காத வேளையில்,
நான்,
உன்னை
பார்த்துக்கொண்டிருப்பதை,
நீ,
பார்த்துவிட்டால்,
வெட்கப்படுகிறாய்,

நான்
உன்னை
பார்க்காத வேளையில்,
நீ
என்னை
பார்துக்கொண்டிர்ப்பதை,
நான்
பார்த்துவிட்டால்,
ஏனடி
கோபப்படுவதை போல
நடிக்கிறாய்....?

                            - இளையபாரதி

Tuesday 21 February 2012


கானல் நீருக்கும்,
என் கண்களின்
கண்ணீருக்கும்
வித்தியாசம் உண்டா
என்ன..?
பல நேரங்களில்
குடிநீருக்கு
பதிலாக,
கானல் நீர் கண்டு
தாகம் ஆற்றி இருக்கிறேன்...!
இப்போதும் அதைத்தான்
செய்து கொண்டு இருக்கிறேன்...!!!

                                   - இளையபாரதி

Sunday 19 February 2012

தலை குனிந்தது நம் "காதல்"




இடை அனைத்து,
இடைவெளி போக்கி,
நாம் நின்ற வேளையில்,
நம் இதழ்களுக்கு
நடுவே..!
ஊசலாடத் தொடங்கியது
நம் காதல்,
தலை தூக்கியது
 "காமம்"
தலை குனிந்தது
நம் "காதல்"
                                   
                                    - இளையபாரதி

Wednesday 15 February 2012

விதவையானேன் நான்...!!!


விதவையானேன் நான்...!!!

விதவையானேன் நான்...!!!

தலை பிள்ளையிலிருந்து
கடைசி பிள்ளை வரை
பெண்ணாகிப்போன குடும்பம்
என் குடும்பம்..
உடன் பிறந்தோர்
எண்ணிக்கை எனக்கே
தெரியாது,,.!!!

தலை பிள்ளையாய் பிறந்து
தொலைத்தேன்..!

புணர்ந்து புணர்ந்தே,
என் தாயை
புதைத்துவிட்டார்
என் அருமை தந்தை,,.

கடமையை செய்தாராம்....!!!
என்னை அவர் வயது
உடைய ஒரு கிழவனுக்கு
என்னை க(கூ)ட்டி கொடுத்து...

வலி வலி வலி
மட்டுமே
என் வாழ்கை..!

கனவுகளில் மட்டும்
சிரித்துக்கொண்டிருக்கும்
கேவலமான வாழ்கை..,

மணமான மறுமாதம்
மறித்துப்போனார்
என் கிழக் கணவன்..!

தனியானேன்,
பாதி பிணமானேன்,

சமூகத்தின் சாக்கடை
பார்வைக்கு
நான் மட்டும்
என்ன விதிவிலக்கா..??

மளிகை கடைக்காரன்
என் மஞ்சத்தில்
இடம் கேட்கிறான்,,.!

பூசாரி கருவறைக்கு
அழைக்கிறார்
என்னை
கருத்தரிக்க வைக்க..,

நட்பாய் சிரித்துவிட்டால்
நடையாய் நடக்கின்றன
நரிகள்,..என் வீட்டு தெருவில்,,.,

கொடுமை சமுதாயம்..!
வாழ்கை பறிகொடுத்த
என்னுடன்
மன்னிக்கவும்
என் தேகத்துடன்
வாழ நினைக்கிறது...,

" பாரதி " இந்த மண்ணில்
பிறந்தவன் தானே,
அவன் பெண்களை
பார்த்த பார்வை,
ஏன் உங்களுக்கு
இல்லாமல்  போனது..???

வாழ்கையை வாழ
விரும்புகிறேன்..,
என்னை வேசியாக்க
முயற்சிக்காதீர்கள்,,.

விதி விளையாடியது
இனி
விதியோடு நான்
விளையாட விருக்கிறேன்,,.

ஊருக்கு " ராமன் " ஆனவர்களே..!
தள்ளி நில்லுங்கள்
என் பார்வை உங்களை
போசுக்ககூடும்,,.!
இதோ,
புறப்படுகிறேன்
என்
பெயரை மாற்றி
" பாரதி " என்று...!!!
                                     - இளையபாரதி













Monday 13 February 2012

********* குழந்தை தொழிலாளி ************


********* குழந்தை தொழிலாளி ************

கொஞ்சம் நேரம்
ஒதுக்குங்கள்
எங்களைப்பற்றி சிந்திக்க,

கருத்தரிக்கும்போதே
கல் உடைப்பதர்ற்கு
என்று எழுதப்பட்டவர்களோ
நாங்கள்..???

இல்லை இல்லை...

கல் உடைப்பதற்கு
என்றே
பெற்றெடுக்க பட்டவர்கள்..!!!

பட்டாசு கொளுத்தி
பரவசம் அடையும்
நீங்கள்..!
சிந்தித்தது உண்டா..?
பட்டாசுக்கள் பூவாய்
வெடிப்பது...
எங்கள் புன்னகை என்று..???

கருகிக்கொண்டு இருப்பது
எங்கள் கைகள் மட்டுமல்ல...!!!
வாழ்க்கையும்தான்...!!!

நீங்கள் உண்டுபோன
மேசை துடைத்து
வாழ்கிறோம்..,
எங்கள் கண்ணீர்
துடைக்க விரல்கள் ஏது..?

கொஞ்சம் எங்களை
திரும்பி பாருங்கள்,
உங்கள் பிள்ளைகளின்
முகம் தெரியக்கூடும்..!!!

பிறக்காத
பேரன் பேத்திகளுக்காக,
அணு உலைக்கு
ஆட்சேபம் தெரிவிக்கிறீர்கள்,
தெருவோரம்
குப்பை பொறுக்கும்
எங்களை
குப்பையாகத்தானே
பார்க்கிறீர்கள்..!!!

துரித உணவகம்
தேடி ஓடும்
எங்கள் அன்பு மக்களே..!!!
எங்கள் துயர் துடைக்க
நீங்கள் வருவது எப்போது..?

பிறவியில் பார்வையற்றவனுக்கு
வண்ணங்களை
விவரிப்பது போலத்தான்
உங்களுக்கு
எங்கள் வாழ்கையை
புரிய வைப்பது...!!!

வாய் பேச முடியாதவன்
தன் கனவை
விளக்குவது
போலத்தான்,
எங்கள் வாழ்வை,
உங்களுக்கு விளக்க
நினைப்பதும்..!!!


துளி நம்பிக்கையில்தான்
கைகள் காய்க்க
வேலை செய்கிறோம்,
நாளை எங்கள்
பிள்ளைகள்
கல்வி கறப்பார்கள் என்று...!!!
                                     
                                      - இளையபாரதி

Sunday 5 February 2012

நாம்,
தினமும்,
சந்தித்துக்கொண்ட
இடத்தை
மறக்க முடியாமல்,
தினம்,
ஒருமுறை சென்று,
அமர்ந்துவிட்டு தான்
வருகிறேன்,
தினமும் நம்மை
பார்த்த
"பூ" விற்கும்
சிறுமி சிரித்துகொண்டே
கேட்கிறாள்,

"என்ன அண்ணா
இப்பலாம் தனியாவே
வறீங்க..?.
"நீங்க,
அவங்க கூந்தலுக்கு
"பூ" வாங்கி
வச்சீங்க,
அவங்க உங்க
காதுல "பூ" சுத்திடாங்க போல"..?
கண்ணீரோடு,
நான் கூறினேன்
"அவ என் காதுல
" பூ " சுத்தலம்மா,
என் காதலுக்கு " பூ "
சுத்திட்டா...
அவ வாழ்க்கைக்கும்
சேர்த்து சுத்திக்கிட்டா..."
மெல்ல நகர்ந்தாள்
சிறுமி என்
தோல்களை தட்டிக்கொடுத்துவிட்டு
கண்ணீரோடு...!!!
                                   - இளைய பாரதி

Thursday 2 February 2012

புரிந்து கொள்ளடி கள்ளி...!


புரிந்து கொள்ளடி கள்ளி...!

சொல்லில் அடங்காத
காதல்
நம் காதல்,
சொல்லி அடங்காத
காதலும் கூட,

ஊடல் காதலில்
தடுக்க முடியாத ஒன்று,
நம் காதல்
ஊடலினால்
சிதைக்க முடியாத ஒன்று,

நீ,
சொல்வதெல்லாம்
சரி என்கிறாய் நீ,
நீ சரி என்பதை எல்லாம்,
சரி என்கிறேன் நான்,
தவறு என்று தெரிந்தும்..!

நீ
கசக்கி போட்ட
காகிதமும்
கவிதை புத்தகமாக
தெரிகிறது எனக்கு,
நீயோ,
சில நேரங்களில்
என்னையே
கசக்கி போடுகிறாயடி கள்ளி..!
நீ
கசக்குவதால் எனக்கும்
பிடித்து போகிறது
கசிந்து போவது...!

நீ சொல்வதெல்லாம்
சரி,
நான் சொல்வதெல்லாம்
தவறு,
எனக்கோ
நீ
எதை செய்தாலும்
சரிதான்,
எதை சொன்னாலும்
சரிதான்,
என்னை
நீ,
தூக்கி எறிந்ததும்
அப்படித்தானடி...!

என்னை கட்டி அனைத்திடு,
முத்தமிடு,
வசை பாடு,
தழுவிடு,
சண்டையிடு,
என்னை தூக்கி
எரிந்துவிட்டும் போ..!
அதற்க்கும் சரி என்கிறேன்,
ஆனால்,
என்னைப்போல்
உன்னை
காதலிக்கும்
ஒருவனை காட்டு...!!!
சவால்விடுகிறேன்...!!!

நமக்குள் இருப்பது
காதல் மட்டும் அல்ல,
ஒவ்வொரு நொடியும்
கருத்தரிக்கும்
தன்னிகரில்லா
தாய்மை...!

புரிந்து கொள்ளடி கள்ளி...!!!

                                - இளைய பாரதி












Sunday 29 January 2012


அண்ணன் முத்துகுமரனுக்கு
என் உயிர் வணக்கம்...!!!

உறங்கிக்கிடந்த
எங்கள்
உயிர் எழுப்பிவிட
உயிர் விட்டவன்
நீ,

தண்ணீர் தெளித்து,
எழுப்பாமல்
எங்களை,
நெருப்பு தெளித்து,
அல்லவா
எழுப்பினாய்,
நீ,

தன் உயிரை
மாய்த்துக்கொள்பவர்களை
கோழை
என்று கருதும்
இந்த உலகில்
உன் உயிரை
மாய்த்துக்கொண்டு
வீரனானவன்
நீ,

விதை
விழுந்தால்
விருட்சமாகும்,
விருட்சமே
விழுந்தது
உன் வடிவில்...!

வீர வணக்கம்
வீர வணக்கம்
என்று
பத்தோடு பதினொன்றாய்,
கோழை கோஷமிட
நான் விரும்பவில்லை,

வீரனே
உனக்கு
என்
உயிர் வணக்கம்...!!!

என்
உயிர் வணக்கம்...!!!


                               - இளையபாரதி



Friday 27 January 2012

...." பசி "" பசி "" பசி "....


" பசி "..." பசி "..." பசி "...
என் பசி
யாரென்று தெரியுமா...?
உங்களுக்கு...?
பசி என்,
" அழையா விருந்தாளி "...

சாதி,மதம்,இனம்,சமயம்
பார்க்காத
சமத்துவ விருந்தாளிதான்,

ஆனால்,
இவன்
என் வீட்டில்
மட்டுமே
இலைப்பார
ஆசைப்படுகிறான்,
இவனுக்கு
நான் என்ன
விருந்து படைக்க..?

ஒட்டு துணியில்
மானம் காக்கும்
என்னைபோன்றோர்..
ஒட்டு மொத்தமாய்
வயிறு
நிறைந்ததே இல்லை...!


எங்கள் வீட்டு
கதவை மட்டும் தட்டும்
இந்த விருந்தாளி,
கல்லாய் கிடக்கும்
கடவுள்களை
சீண்டி கூட பார்க்காதோ..?

சாமிக்கு படைத்துவிட்டு
நீங்கள் வாங்கும்
ஒரு
உருண்டை பிரசாதத்தில்
சிறு உருண்டை
கொடுத்து இருந்தாலும்
பசி போக்கி இருப்பேனோ..?
அப்போது " பசியாற்றுதல் "
என்றால் என்ன என்று
என்னால்
சுவைத்து இருக்க முடியுமோ...?

நீங்கள் உணவுகளை
உண்டு பசியாற்றுகிறீர்கள்,
நான் பசியை
உண்டு பசியாற்றுகிறேன்,

நீங்கள் உண்டு
போட்ட உணவு காகிதங்களில்
இருந்த உணவை உண்டே
இத்தனை நாட்கள்
உயிர் வாழ்ந்து இருக்கிறேனே...!
உங்கள் உணவை
எனக்கு பகிர்ந்து இருந்தால்...
நினைத்தாலே
நெஞ்சமெல்லாம்
மகிழ்ச்சியில்..பசியாருகிறது...!!!

நீங்கள் என்னைபோலே,
பசியை ருசித்து
இருக்க வாய்ப்பில்லை...
ம்ம்ம்ம்... நீங்கள்
என்னைபோலே
தாய் இல்லாதவனா
என்ன..?
என் தாய் மட்டும்
இருந்தால்
என் வாழ்வில் பசி என்பதேது..???

ஒரே முறை
ஒரே ஒரு முறை
பசியை ருசித்து பாருங்கள்,
அப்போது
எங்கள் அன்றாட
உணவான
பசியின்
கொடிய  ருசி
உங்களுக்கு
தெரியக்கூடும்...!!!
                         
                           - இளையபாரதி













Monday 23 January 2012


உனக்கு,
ஆயிரம் முறை
சொன்னேன்
"உதட்டுச்சாயம்
பூசாதே",என்று
"போ",
சென்று
பதில் கூறு..!
யாரோ...
புகார் கொடுத்து
இருக்கிறார்களாம்
"வானவில்லின்
ஒரு வண்ணம்
காணவில்லை", என்று.

                           - இளையபாரதி

Saturday 21 January 2012

யார் காரணம் ..!


யார் காரணம்
என் இந்த
நிலைக்கு..?

எந்த கவலையும்  இல்லாமல்,
தன்,
காமக்கழிவை
என் தாய் மீது
புலம் பெயர்த்த 
அந்த
யாரோ ஒரு ஆணா..?

விந்தில்
உயிர் ஜனிக்கும்
என்று தெரிந்தும்,
தன் வயிற்று பசியை
போக்கிக்கொள்ளும்
சாக்கில் தன்
காமபசியையும்
போக்கிக்கொண்ட
என் தாயா..?

நீங்கள் யாரும்
என்னைப்பற்றி
கவலைப்பட போவதில்லை..,!

எங்கோ இருக்கும்
தெய்வத்திற்கு,
உங்கள் வீட்டில்
உண்டியல் சேர்த்து,
பல நாட்கள்
வரிசையில் நின்று
தெய்வ தரிசனம்
பார்த்து,
உண்டியல்
காணிக்கை செலுத்தும்
நீங்கள்
தினமும்
சாலையோரம்
நான்,
பசித்து கிடப்பதை
பார்க்காமல்
போவது எப்படி..?

நான் என்ன செய்தேன்..?

நான் பிறப்பு வரம் கேட்கவில்லையே..?
வலுக்கட்டாயமாய்
எனக்கு பிறப்பு
கொடுத்தது யார்..?

அம்மா என்கிறார்கள்,
அப்பா என்கிறார்கள்,
குழந்தைகள்,
எனக்கு...?

அழுக்காய் இருப்பதால்
அருகில் அனுமதிக்காத
மக்களே..!
எத்தனை பேர்
என்னை
குளிப்பாட்ட நினைத்தீர்கள்..?

எனக்கு பரிதாபம்,
பார்க்கும் உங்களில்
எத்தனை பேர்
என்னை
படிக்க வைக்க எண்ணினீர்கள்..?

குப்பைகளாக
பார்க்க படுவதினால்
குப்பையே
தெய்வமாகி
போனது எனக்கு,

என் கேள்விகளுக்கு
எந்த
பகவான் பதில் கூறுவார்..?
எந்த
பகுத்தறிவாளி
பதில் கூறுவார்..?

என்னை
குப்பையாய்
பார்க்கும் மக்களே..!
என்னை வாழ
வைப்பவர்கள்  நீங்கள்
நீங்கள் வாழவேண்டும்,

நீங்கள் குப்பை
போட்டால்தான்,
என் குப்பை
வயிறு நிறையும்...!

உணவு வேண்டாம்
காகிதங்களை
குப்பையில் போடுங்கள்..,
நானும்
"உழைத்து உண்ணவே விரும்புகிறேன்"...!

நான் வெளியே
அழுக்காய்
இருந்தாலும்
உள்ளே சுத்தமாய்
இருக்கிறேன்...!

" நீங்கள் "....???
                              - பிரகாஷ் பாரதி

Friday 20 January 2012





என்,
தமிழ் மொழியுடன்,
நான்,
சண்டையிடும்
ஒரே
தருணம்
உன்னை பற்றி,
கவிதை எழுத
நினைத்திடும்போது..!
தமிழ்,
யாருக்கும்
எளிதில்
கொடுத்து விடுவதில்லை
சிறப்பான
வார்த்தைகளை...!!!
                             - பிரகாஷ் பாரதி

Wednesday 18 January 2012

நான்,
உன்னை 
முத்தமிடுகையில்,
உன் வெட்கமும் 
கற்பூரம் போலத்தான்,
சட்டென்று 
பற்றிக்கொள்ளும்,
எரிந்து
முடிந்துபிறகு
தடயம் இல்லாமல்
காணாமல்போகும்,
எதுவுமே
நடக்காதது போல்
நீ,
நடிப்பது மாதிரி...!!!
               - பிரகாஷ் பாரதி


தவம்,
இருந்துதானே,
வரம்,
வாங்குவார்கள்...!
வரம் 
கிடித்த பின்னே 
ஏன் தவமிருக்கிறது
நீ
இட்ட கோலம் 
உன் வீட்டு 
வாசலில்...?
                      - பிரகாஷ் பாரதி 

Sunday 15 January 2012

நன்றி...!!! உழவா...!!!


உச்சியில் விழி வைத்து
வானத்தை பார்க்கும்,
தமிழ் உழவன்,

அறுவடை செய்தததை
அள்ளி கொடுத்து
மிச்சம் இருப்பதை
மகிழ்ச்சியாய் உண்டு,

பசியை மட்டுமே
ருசித்து பார்க்கும்,
எம் உழவன்,

உலகிற்கே பசி போக்கும்
எம் உழவன்,

நம் சதை
வளர்க்கிறோம்
அவன் உணவு உண்டு,

அவன் சதை
இழக்கிறான்
நமக்கு உணவு கொடுத்து,

இந்த திருநாள்
மட்டும்தான்...!

உணவு அழித்தவனுக்கு
நன்றி கூறி
நாம் நன்றியாய்
இருப்பது
இந்த நாளில்
மட்டும் தான்...

ஊர் கேட்க
உரக்க சொல்வோம்
" பொங்கலோ பொங்கல் " என்று

நம் உழவனின்
சந்தோஷமும்,
எப்போதும்
பொங்காத
அவன்
வயிறும்
பொங்கட்டுமே...!

உழவா
 நான்,
உரக்க சொல்வேன்
நீ இட்ட....
உணவிற்கு நன்றி...!!!
                  - பிரகாஷ் பாரதி



Wednesday 11 January 2012


உனக்காகவே
துடித்துக்கொண்டு
உனக்காகவே
இயங்கிக்கொண்டு இருக்கும்
என்
இதயம்
நீ
இல்லாத
நேரங்களில் மட்டுமே
எனக்காக
அழுகிறது...!
                - பிரகாஷ் பாரதி

Tuesday 10 January 2012

அங்கீகரிக்க படாத கவிதைகள்....!

அங்கீகரிக்க படாத
கவிதைகளாகி போகின்றன,
உன்னைப்பற்றி
எழுதாத
எனது சில
கவிதைகள்....!

                  - பிரகாஷ் பாரதி

Saturday 7 January 2012

தோழியே..!

தோழியே..!

கலக்கம் எதற்கு..?

கை கோர்த்து நடக்க
உனக்கு நட்புக்கள் 
இருக்கையிலே..!

துக்கமும்...
துயரமும்...
உன் விழி மறைத்தால்..,
கண்ணீர் துடைத்து
உன் தலை
சாய்க்க
உன் " அப்பா " தோள்கள்
இருக்கையிலே..?

நித்தமும்
நித்திரை
தொலைத்து..,
நிலவு காட்டி
உனக்கு நித்திரை 
வழங்க 
உன் தாய்
இருக்கையிலே..!

பாரதியின்
பாடல் கேட்டு
வளர்ந்தவள் அல்லவா
நீ..!

இன்று நீ
மண் புழுவாய்
நெளிவது எதற்கு..?

எதை இழந்தாய்..?

எப்படி இழந்தாய்..?

ஒரு கணம் யோசி..,
உன் மனம்
சொல்வதை கேள்..,

நடை போடு,
வழியில்....!
வெறிகொண்ட
நாய்களையும்
பேய்களையும்
நசுக்கி விட்டு போ...!

ஒரு பாதை தெளிவானது,

ஒரு பாதை குழப்பமானது,

குழம்பினால் மட்டுமே
தெளிவாக முடியும்,
ஆனால்
குழப்பம் மட்டுமே இருந்தால்
தெளிவு
பிறக்க வழி ஏது...?

தைரியமான
பாதையில்
தளராது
நடந்து போ..!

தடுக்க ஆள் இல்லை..

உன்னை ஒடுக்கவும்
ஆள் இல்லை ..!

தெளிவான நடை பயில்...!
       
                           - பிரகாஷ் பாரதி