அண்ணன் முத்துகுமரனுக்கு
என் உயிர் வணக்கம்...!!!
உறங்கிக்கிடந்த
எங்கள்
உயிர் எழுப்பிவிட
உயிர் விட்டவன்
நீ,
தண்ணீர் தெளித்து,
எழுப்பாமல்
எங்களை,
நெருப்பு தெளித்து,
அல்லவா
எழுப்பினாய்,
நீ,
தன் உயிரை
மாய்த்துக்கொள்பவர்களை
கோழை
என்று கருதும்
இந்த உலகில்
உன் உயிரை
மாய்த்துக்கொண்டு
வீரனானவன்
நீ,
விதை
விழுந்தால்
விருட்சமாகும்,
விருட்சமே
விழுந்தது
உன் வடிவில்...!
வீர வணக்கம்
வீர வணக்கம்
என்று
பத்தோடு பதினொன்றாய்,
கோழை கோஷமிட
நான் விரும்பவில்லை,
வீரனே
உனக்கு
என்
உயிர் வணக்கம்...!!!
என்
உயிர் வணக்கம்...!!!
- இளையபாரதி