Thursday 15 December 2011

யார் சொல்வார்கள்???

" பூ " வை
கீழ போடாதீங்க..!

ஐயோ,
அந்த " பூ " வை
ஏன் மிதிகிறீங்க..?

அம்மா..! திட்டுவாங்க...

அம்மா..! இங்க பாரும்மா..
" பூ " வை மிதிக்கிறாங்க..!

என்று உறங்கும்
தன் அம்மா வை
எழுப்பும்
அந்த
பிஞ்சு சிறுமியிடம்
யார் சொல்வார்கள்,
அது அவள்
அம்மாவின்
இறுதி ஊர்வலம் என்று...?
                       - பிரகாஷ் பாரதி

2 comments:

  1. இதைவிட இயல்பாய் உணர்வின் வெளிப்பாடாய் யாராலும் மழலையின் துக்கத்தை சொல்ல இயலாது ....

    ReplyDelete