மீட்கப்படாத இரவொன்று..!
காதலுக்காய் அர்ப்பணிக்க
முடிவெடுத்த பின்பு,
காமம் சற்று தலை தூக்க
காதல் முகம் மூட
அந்த இரவில்
மின்னல் வந்து போகும்
அந்த அரை நொடி
வெளிச்சத்தில் தெரிந்த
உன் அழகை,
மின்சாரம் பாய்ச்சிய
என் விரல் கொண்டு
தழுவ முற்பட்டபோது
மின்னலின் மகளாய்
காம முகம் விலக்கி,
காதல் முகம் விளக்கி,
மின்னலாகி மறைந்தாய்...
வாழப்படாமல் இருக்கிறது
அந்த இரவு இன்னும்
வாழ்ந்தாக வேண்டும்
நாம் அந்த இரவை...
மீட்கப்படாமல் இருக்கிறது
அந்த இரவு...
மின்னல் மகளே வா
மீட்டெடுப்போம் வா
மீட்கப்படாத இரவை..!!
- இளையபாரதி