Monday 12 December 2011

எரிந்துகொண்டே,
சிரித்துகொண்டு,
இறந்துகொண்டு,
இருந்த 
' தீ ' குச்சியை 
பார்த்து கேட்டேன்
இறக்கும் பொழுதும்
எப்படி சிரிக்கிறாய்? என்று,
' தீ ' குச்சி
சிரித்துக்கொண்டே
சொன்னது
"நான் மோட்சம்
அடைந்தேன்" என்று,
எப்படி? எனக்கு
கூறுவாய என்றேன் நான்,
' தீ ' குச்சி,
சொன்னது
என்னை
' தீ ' மூட்டியவள்
உன்னவள் என்று....!
- பிரகாஷ் பாரதி

1 comment: