Tuesday 4 June 2013

முதிற்கன்னி



துயில் களைந்து,
பொன் மஞ்சள் குழைத்து,
பொன்மேனி பூசி,
தேகம் குளித்து,
கார் குழல் நனைத்து,
தலைக்கூந்தல் துணி சுருட்டி,
பய பக்தியை
தன் கணவனை
எழுப்பினால்,
அவளும் எழுப்பப்பட்டாள்,
கனவு கலைந்தது
"முதிற்கன்னி"க்கு...!

- இளையபாரதி