Saturday 31 March 2012

" ஈழன் நான் "



ஈழன் நான்,
தமிழ் ஈழன் நான்,

சொர்கமாக்க நினைத்த
என் ஈழ பூமியில்,
சொந்தங்களின் பிணங்களில்,
வாசம் செய்தவன் நான்,

குருதி வழியும்
குழந்தைகளை,
குழிக்குள் புதைப்பதை,
பார்த்துவிட்ட பாவி நான்..!

என்
சகோதரிகளை
கொன்று புணர்ந்தாயே...
ஈனம் கெட்டவனே,
" தமிழச்சி "
உயிருடன் இருந்தால்
புணர விடமாட்டாள்,
என்று கொன்று புணர்ந்தாயோ...?
மானம் கேட்ட
மக்கள் இனமே...!!!

புலியின் தம்பி நான்
எரிந்து மடிந்தேன்
என்று எண்ணினாயோ..??

உயிர்த்தெழுந்தேன்
என் ஈழம் மீட்க,

புலியிடம் இருந்து
தப்புவது சுலபமல்ல,
பசித்த புலி நான்,
ஈழ புலி நான்,
தப்பிக்க கனா கண்டாயோ..?

வந்தேறிகள் எங்களை
ஆட்சி செய்வதா..?
வேசிகள் எங்களுக்கு
வேலி இடுவதா..!!!

ஈன இனமே,
நீ,
ஈழனைக்கொல்வதா..??

என் ஈழம்
மீட்பது சத்தியம்,

ஓடி ஓடி
எங்களை ஒளியவைத்தாயே ..!
நீ ஒளிந்து கொள்ள
இடம் தேடு...!


புறப்பட்டேன்
புறமுதுகு காட்டி ஓடு..!!!



ஒளிந்துகொள்ள
தமிழகம்
வந்துவிடாதே...!!!
எங்கள் தமிழச்சிகள்,
புலி விரட்டவே
" முறம் "பயன்படுத்தினார்கள்..
நரிகளுக்கு
" செருப்பு "...!!!

                                                  ௦- இளையபாரதி





Thursday 29 March 2012

நம் வீடு


நீ,
நடந்த பாதையெங்கும்,
நீ,
மிதித்த 
காலடி மணலை,
சேகரித்து வைத்திருக்கிறேன்,
நாம் வாழ்வதற்கு 
ஒரு வீடு கட்ட,

உன் 
உதிர்ந்த 
கூந்தல் முடி,
சேமித்து அதில் 
கூரை அமைக்கிறேன்,

உன்,
நகத்துண்டுகள்
நம் வீடு 
கட்டும் கற்கள்..,

உன் 
துப்பட்டாக்கள்
நம் 
வீட்டுக் கதவுகள்,

நம் 
வீட்டிற்கு 
விளக்கு எதற்கு..?
உன் 
விழிகள் இருக்கயிலே...?

நீ 
விழி மூடும்போதெல்லாம்
நமக்கு இரவு,

எங்கே கொஞ்சம் 
விழி மூடு 
இரவு கொண்டாடுவோம்...!!!

                                       - இளையபாரதி 







Monday 26 March 2012



உன்,
குலியலரை
கதவுகளின்
பின்னால்
நீ,
ஒட்டி வைத்த
பழைய
அச்சு பொட்டுக்கள்தான்,
என்,
புது சட்டையின்
பொத்தான்களாயின....!!!

                           - இளையபாரதி

Sunday 25 March 2012

என்ன பதில் சொல்ல போகிறாய் தமிழா...???




என்ன பதில்
சொல்ல போகிறாய்
தமிழா...???
உயிர் இழந்த நம்  சொந்தங்களுக்கு..?

மானம் காத்த
தமிழ் மரபு
உன்னால் மானம்கெட்டு போவதா..?
தமிழா இது நீதானா..?

உன் உடலில்
வேறு எவனேனும் புகுந்தானா..?

கொத்துக்கொத்தாய்
நம் சொந்தங்கள்
கொல்லப்படுகயிலே,
"கொலைவெறி"என்று
குத்தாட்டம் போட்டாயே..!!
என்ன பதில்
சொல்ல போகிறாய் ..?

தாயின் மார்பில்
பால் சுரக்காமல்
பிஞ்சிகள் பல
ஈழத்தில் மடிந்த போது,
வந்தேறி நடிகர்களுக்கு
பால் அபிஷேகம் செய்தாயே,
நீ மானம் கேட்டு போனதெப்படி..?

சகோதரிகள் சூரையாடப்படுகயிலே,
சத்தமாய் நீ
பாடல் கேட்டு கிடந்தாயே..!
என்ன பதில்
சொல்ல போகிறாய்
தமிழா...???

தங்கள் உயிர் காக்க
கை நீட்டி,
காப்பாற்றக் கெஞ்சிய
நம் சொந்தங்களின்,
கையை விடுத்து,
" கொலைவெறி " பாடலுக்கு,
கைதட்டி நடனமாட
உன்னால் எப்படி முடிந்தது..??

மானம் போற்றுபவன்
தமிழன்,
மானம் கேட்டவன் அல்ல,
அப்படி மானம் கெட்டுப்போனால்,
அவன் தமிழனே அல்ல...!
நீ எப்படி..?
தமிழனா...???

                                - இளையபாரதி



Friday 23 March 2012





ச்ச்சீ " போடா " என்று
நீ,
என்னை
செல்லமாய்,
திட்டிய போதுதான்,
ஆணாய்,
பிறந்ததில்
கர்வம் கொண்டது
என்
மனது...!!!

- இளையபாரதி

என்,
முகம்
உரசிப்போன
உன்,
துப்பட்டாவிற்கு,
தெரிந்திருக்க
வாய்ப்பிருக்கிறது,
என் "சுவாசம்",
உன் "வாசம்" தான் என்று...!!!

                                        - இளையபாரதி

Wednesday 21 March 2012

" தமிழ்தான் " அழகு...!



நீ,
சேலை கட்டி
எடுத்துக்கொண்ட
புகைப்படத்திற்கும்,
சுடிதார்,
அணிந்து
எடுத்துக்கொண்ட
புகைப்படத்திற்கும்,
பெரிய வித்தியாசம்
ஒன்றும் இல்லை,
சுடிதாரில்
" தமிழ் " பெண்ணாய்,
தெரிகிறாய்...!
சேலையில்
" தமிழாகவே "
தெரிகிறாய்...!
எது அழகு..?
எனக்கு
" தமிழ்தான் " அழகு...!

                                 - இளையபாரதி

Friday 16 March 2012




குறுகுறுவென நீ முறைக்க,
திரு திருவென நான் பார்க்க,
பட பட வென என் இதயம் துடிக்க,
கலகல வென நீ சிரித்தாய்,
சில்சில்லென்று மழையின் போதும்,
மலமலவென  என்னை
நீ கட்டி அணைக்கயிலே...!
திகுதிகுவென என் தேகம் சுட்டதடி,
மடமடவென முத்தமிட்டு ஓடிவிட்டாய்...!
சல்சல்லேன்ற உன் கொலுசுசத்தம்
கேட்டபடியே..,
படபடவென தரையில் வீழ்ந்தேன் நான்...!!!

                                                      - இளையபாரதி


Thursday 15 March 2012

நீ " மலர் "...!!!




கடற்க்கரை மணலில்
உன்னை,
என் முதுகில்
உப்பு மூட்டை
தூக்கிக்கொண்டு
நடந்து செல்கையில் தான்
புரிந்துகொண்டேன்...,
உனக்கு,
ஏன்
" மலர் " என்று
பெயர் வைத்தார்கள் என்று...!!!

                                   - இளையபாரதி

Wednesday 14 March 2012


என்,
வாழ்கையில்...
எப்போதும்
கவிதைகளே
உயிராகிப்போனது ..
எனக்கு...!!!
நீ,
என்னோடு
இருந்த வரை
நீ...!!!
என்னை
நீ,
பிரிந்ததில் இருந்து
நான் எழுதும்
கவிதைகள்...!

                       - இளையபாரதி

Friday 9 March 2012

ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்...

சிறியதாய் எனக்கு அறிவு பரிமாறிய என் ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்...

எப்படி அடைப்பது
உங்களிடம் பட்ட கடனை..?
பணம் கடன் பட்டிருந்தால்...
பணம் கொண்டு அடைக்கலாம்...,
அறிவு கடன் பட்டேன்
எப்படி அடைப்பேன்..?

நீங்கள் அன்று
என்னால் எத்தனை
இன்னல்களை அனுபவித்தீர்கள்..?
இன்று நான்
இன்பமாய் வாழ
வழி வகுத்தீர்கள்..!

சிவாஜி யின்  பாடத்தில்
" வீரம் " போதித்தீர்கள்..!

புத்தனின் பாடத்தில்
" பொறுமை " போதித்தீர்கள்..!

எம் பாரதியின் பாடத்தில்
எல்லாமே போதித்தீர்கள்...!

ஒவ்வொரு பாடம்
எடுக்கும் போதும்
அந்த கதாபாத்திரமாக
திகழ்ந்தீர்கள் இன்னும்
என் கண் முன்னே
நீங்கள் அதே கதாபாத்திரமாய்...!

பள்ளியில் தாயை
பிரிந்த குறை
கண்டதில்லை நான்..!

மாதா, பிதா,குரு, தெய்வம் என்பார்கள்...!
ஆனால்
" குரு " இதில் மாதா,பிதா,தெய்வம்
மூன்றும் சங்கமித்தது எப்படி..?

" குரு " நீங்கள் " குரு " மட்டுமல்ல
என் அறிவின் " கரு "...!

உங்களிடம் அறிவுக் கடன்
பெற்றிருக்கிறேன்,
உங்களுக்கு அறிவுக் கடன்
பட்டிருக்கிறேன் ,
என எப்படிப்
பார்த்தாலும்
அறிவு கடனாளியாக இருப்பது
எனக்கு பெருமையே..!!!

என்
தமிழ் கற்றுக்கொண்டது
உங்களிடம் இருந்தல்லவா...?

சில நேரத்தில்
கடவுளை
வெறுத்தாலும்
உங்களை மட்டும்
வணங்க தோன்றுகிறது...!!!

" குருவே சரணம் "

" குரு "
நீ
என் அறிவின்
" கரு"
                             - இளையபாரதி

Thursday 8 March 2012

"காதல் பலி"



கடவுளின்,
பெயரால்
மூடநம்பிக்கையின்
உச்சமாக,
உயிர் "பலி"
கொடுப்பது போலதான்,
நீ,
கேட்காமலே
என்
இதயத்தை
உனக்கு
"பலி"
கொடுப்பது...!!!
" காதல் " என்னும் பெயரில்...!!!

                                     - இளையபாரதி

Friday 2 March 2012


ஒரு வேளை,
எனக்கே
தெரியாமல்,
போயிருக்கும்....
எனக்கு,
கவிதை
எழுத தெரியும்,
என்று,...!
உன்,
கண்களை
பார்க்காமல்
இருந்திருந்தால்...!!!

                   - இளையபாரதி