Thursday 15 December 2011

தனி ஒரு உலகம் வேண்டும்..!

தனி ஒரு உலகம் வேண்டும்..!

தான் கொண்ட
காதலை முதலில்
தோழனிடம் சொல்லாமல்,
தந்தையிடம்
பகிர்ந்து கொள்ளும்
சுதந்திரம் உள்ள உலகம்,

செயற்கை துளியும்
இல்லாமல்,
முற்றிலும்
இயற்கையாய்
ஒரு உலகம்,

அடை மழையில்
ஆடை இல்லாமல்
நான் ஆட்டம் போட்டாலும்
ஆபாசம் இல்லாமல்
என்னோடு விளையாடும்
ஒரு உன்னத உலகம்,

கதவுகள் இல்லாத
வீடுகளை கொண்ட
ஒரு உலகம்,

கண்ணீர் அறியாத
ஒரு உலகம்,

தண்ணீர் சண்டை
இல்லாத
ஒரு உலகம்,

விழிகள் பேசும்
மொழி கொண்ட
ஒரு உலகம்,

கவிதைகள் தேசிய
மொழியான
ஒரு உலகம்,

மதங்களை
மண்ணோடு
புதைத்து
மனிதம்
பேசும்
மகத்தான
ஒரு உலகம்,

கடிகாரம்
இல்லாத
ஒரு உலகம்,

வாக்கு தவறிய
மந்திரியை
மண்டியிட வைத்து
குட்டிப்பார்க்கும்
உரிமையான்
ஒரு உலகம்,

இப்போது இதுவரை
போதும்,
இந்த உலகம்
முதலில் கிடைக்கட்டும்
அடுத்த உலகத்தை
பிறகு யோசிப்போம்...!
          
          - பிரகாஷ் பாரதி





No comments:

Post a Comment