Sunday 25 March 2012

என்ன பதில் சொல்ல போகிறாய் தமிழா...???




என்ன பதில்
சொல்ல போகிறாய்
தமிழா...???
உயிர் இழந்த நம்  சொந்தங்களுக்கு..?

மானம் காத்த
தமிழ் மரபு
உன்னால் மானம்கெட்டு போவதா..?
தமிழா இது நீதானா..?

உன் உடலில்
வேறு எவனேனும் புகுந்தானா..?

கொத்துக்கொத்தாய்
நம் சொந்தங்கள்
கொல்லப்படுகயிலே,
"கொலைவெறி"என்று
குத்தாட்டம் போட்டாயே..!!
என்ன பதில்
சொல்ல போகிறாய் ..?

தாயின் மார்பில்
பால் சுரக்காமல்
பிஞ்சிகள் பல
ஈழத்தில் மடிந்த போது,
வந்தேறி நடிகர்களுக்கு
பால் அபிஷேகம் செய்தாயே,
நீ மானம் கேட்டு போனதெப்படி..?

சகோதரிகள் சூரையாடப்படுகயிலே,
சத்தமாய் நீ
பாடல் கேட்டு கிடந்தாயே..!
என்ன பதில்
சொல்ல போகிறாய்
தமிழா...???

தங்கள் உயிர் காக்க
கை நீட்டி,
காப்பாற்றக் கெஞ்சிய
நம் சொந்தங்களின்,
கையை விடுத்து,
" கொலைவெறி " பாடலுக்கு,
கைதட்டி நடனமாட
உன்னால் எப்படி முடிந்தது..??

மானம் போற்றுபவன்
தமிழன்,
மானம் கேட்டவன் அல்ல,
அப்படி மானம் கெட்டுப்போனால்,
அவன் தமிழனே அல்ல...!
நீ எப்படி..?
தமிழனா...???

                                - இளையபாரதி



No comments:

Post a Comment