நீ,
நடந்த பாதையெங்கும்,
நீ,
மிதித்த
காலடி மணலை,
சேகரித்து வைத்திருக்கிறேன்,
நாம் வாழ்வதற்கு
ஒரு வீடு கட்ட,
உன்
உதிர்ந்த
கூந்தல் முடி,
சேமித்து அதில்
கூரை அமைக்கிறேன்,
உன்,
நகத்துண்டுகள்
நம் வீடு
கட்டும் கற்கள்..,
உன்
துப்பட்டாக்கள்
நம்
வீட்டுக் கதவுகள்,
நம்
வீட்டிற்கு
விளக்கு எதற்கு..?
உன்
விழிகள் இருக்கயிலே...?
நீ
விழி மூடும்போதெல்லாம்
நமக்கு இரவு,
எங்கே கொஞ்சம்
விழி மூடு
இரவு கொண்டாடுவோம்...!!!
- இளையபாரதி
No comments:
Post a Comment