Friday 4 May 2012

கொல்லப்படும் சிசுவின் மரண ஓலம்..!!!




கொல்லப்படும் சிசுவின் மரண ஓலம்..!!!

உங்களால்
நான்  பெற்று
கொள்ளப்படுவேன்
என்று நினைத்தேன்
ஆனால்
பெறாமலே
கொல்லப்பட்டேன்..!அம்மா..!!

கொல்லவா என்னை
சுமந்தாய்..?

அல்லது அடுத்து
பிறக்கப்போகும்
என் தம்பிக்கு
ஒத்திகை
பார்த்தாயா..???

நான் பெண் என
தெரிந்ததால்
என்னை
பிணமாக்கினாய்..!
ஆணாக இருந்திருந்தால்
என்னை
மகனென்று இருப்பாய்..!
வளர்ந்து
நான்
திருநங்கையாகி இருந்தால்
என்ன செய்து இருப்பீர்கள்
அப்பா...??

எந்த ஒரு
பிறப்பிற்கும்
ஆண், பெண்
இருவரும் தேவைதானே..??
பெண்ணை மட்டும்
அழித்துவிட்டால்
ஆண்களை மட்டும்
கொண்டு
கரு தரிக்குமா
இந்த அறிவியல்..???அம்மா..???


எனக்கு கள்ளி பால்
கொடுத்துவிட்டு அழுதீர்களே
அப்பா..!!அம்மா..!!!
பிணமாய் நான்
பிறந்தபின்னாவது
என் உச்சியில்
சிரித்துக்கொண்டே
ஒரே ஒரு
முத்தமிடுங்கள்
பிணம் என்று ஒதுக்காதீர்கள்..!!!
பிணமானாலும்
நான் உங்கள் பிள்ளை..!!!


                          - இளையபாரதி





No comments:

Post a Comment