Saturday 12 May 2012

நீ நீதான் அம்மா..!!!



" அம்மா "
உன் தொப்புள்கொடி  அறுத்து
உயிர் பெற்ற எனக்கு
தகுதி இல்லை " அம்மா ",

உனக்கு வாழ்த்து சொல்ல
உயிர் கொடுத்த உத்தமியே..

உன்னை போலே
யார் இங்கே..?"அம்மா
கருவாகி,உருவாகி
ஈன்றெடுத்து..
உலகம் காட்டினாய்
என் உலகம்
நீதானே அம்மா..!

உயர உயர பறந்தாலும்
பருந்தாகத
ஊர் குருவி போலதான் " அம்மா "..!
எத்தனை உறவுகள்
வந்தாலும்,இருந்தாலும்
நீ நீதான் அம்மா..!

எத்தனை மென்மையான
பஞ்சு மெத்தையில் உறங்கினாலும்
உன் மடிக்கு
ஈடில்லை அம்மா..

என் தசை,நரம்புகள்
உதிரம் அனைத்திலும்
எழுதப்பட்டுள்ளது
உன் பெயர் அம்மா.. !

என் உயிரின்
சொந்தக்காரி நீ..
என் சுவாசம்
உன்னிடம்
நான் பெற்ற கடன்..!

கவிதை போதாது
உன் பெருமை பேச...

எதை சொல்லி ஈடு செய்ய
எதை கொடுத்து ஈடு செய்ய
" அம்மா "...
என்ன வேண்டும் அம்மா
உனக்கு..??

உயிரா..? அன்பா..?? பாசமா..??
எதை நீ கேட்டாலும்
அது உன்னிடம் நான்
பெற்றதாகத்தான் இருக்கும்
" அம்மா "..!!!

நீ நீதான்
அம்மா என் அம்மா..!!!
தெய்வத்திற்கு தெய்வம்
அம்மா நீ..!!!

நீ நீதான் அம்மா..!!!

                        -    - இளையபாரதி





No comments:

Post a Comment