Wednesday 8 January 2014

" தீ " இட்டு கொல்வதா..??



தமிழை மறந்த
தரம் கெட்ட மனிதருக்கு
தடை ஏதுமில்லாமல்
தரணியில் வாழ இடமுண்டாம்,.!

தமிழனாய் பிறந்து
தரம் இறங்காமல் சிரம் தாழாமல்
தன்மானம் போற்றும்
தரமுள்ள மாந்தருக்கு
தரணியில் வாழ
தகுதி இல்லையாம்..!

தாய் இழந்த பிள்ளைபோலே
தமிழை இழந்து தவிப்பதா..??
தமிழா..?
தமிழ்ச்சாதி பிள்ளைகள்
தாய் இல்லா அனாதைகளாவதா..??

தமிழ் நம் தனித்தமிழ்
தண்ணீரில் போட்ட கோலமாவதா...??
மெல்ல தமிழ் இனி சாவதா..??
தரணியாண்ட நம் தாயை..நம்
தமிழ் தாயை...நாமே
" தீ " இட்டு கொல்வதா..??
நம் தாயை நாமே
" தீ " இட்டு கொல்வதா..??

                               - இளையபாரதி


No comments:

Post a Comment