மகாகவியின் நினைவு நாள் 11-09-2012
எங்கு சென்றாய்..?
எம் தலைவா..?
எம்மை தனியே விட்டு..?
உன் எழுத்தாணி முள்
கீறி சென்ற
உன் நெருப்புக் கவிதைகள்..,
என்னை வளர்த்தன.,
உன் வீர நடையில்
விதைக்கப்பட்டது
விடுதலை...!
உன் விழி
கக்கிய நெருப்பு
காற்றை பொசுக்கிய
உன் சுவாசம்...,
கதகதக்கும்
உன் கருப்பு
கோட்டுக்குளே...
உன்னை
கட்டி அனைத்து..
கண் மூடி இருக்க
வேண்டும் நான்..
நீ வாழ்ந்த
காலத்தில் வாழாத..
குறைதான் எனக்கு..!
சரியாக தேர்வு
செய்தது தமிழ் உன்னை..!
தன் இனிமையை
அனைவருக்கும்
விருந்தளிக்கவும்...
தன் ரௌத்திரம்
புரிய வைக்கவும்...!
காலம் சென்றாலும்
காலங்கள் பல கடந்தாலும்
நீ கடைந்தெடுத்த
கவிதைகளை
கரு சுமந்த
தாய் போல..
தமிழ் சுமக்கும்...!!!
" மெல்ல தமிழ் இனி சாகும்"
என்றொரு பேதை உரைத்தான்
என்றாயே தலைவா..!!!
எப்படி சாகும்..???
உன் கவிதைகள்
இருக்கும் வரை..!
தித்திக்கும் " தீ " நீ...!!!
இன்னுமும்
இனிமையாக
கொழுந்துவிட்டு
எரிந்து கொண்டுதான்
இருக்கிறாய்..
எங்கள் இதயங்களில்..!!!
- இளையபாரதி
No comments:
Post a Comment