Wednesday 10 April 2013

அவசரம் இல்லை.. !!!




எங்கள் நரம்புகள் கிழிக்கப்பட்டு....
நாடி துடிப்பு நின்று,
ரகசிய உறுப்புக்கள்
ரணமாக்கப்பட்டு..,
துப்பாக்கி குண்டுகளும் துளைத்து,
பால் கொடுத்த நெஞ்சங்கள்..,
அறுக்கப்பட்டு..,
எங்கள் சவங்கள் காக்கைகளுக்கு
இறையாக்கப்பட்டு...
காக்கை உண்ட மீதி,
"தீ"க்கு இறையாக்கப்பட்டு..
எங்கள் சாம்பல்..
காற்றுக்கு இறையாகட்டும்..!
அவசரம் இல்லை..
அவசரம் இல்லை...
இறுதி ஊர்வல வேலை
உங்களுக்கு இல்லை...
கிரிக்கெட் பார்த்துவிட்டு
மெதுவாய் வாருங்கள்...!
             
                                                        - இளையபாரதி

No comments:

Post a Comment