Thursday 7 March 2013

பேடிகள் நாங்கள்...!!!



பேடிகள் நாங்கள்..!

ஈழம் வாழும் சொந்தங்களே..,
கொன்று குவியுங்கள் எங்களை..
பேடி நாங்கள்..!

அயல் நாட்டவன் ஒருவன்
வெளிக்கொணரும்,
ஆவணப்படம் பார்த்தால்தான்..
உங்கள் வலி
உணரக்கூடும் எங்களால்...
ஆம் பேடிகள் நாங்கள்...!

ஆயுதம் கொடுத்து
உங்களை கொலை செய்த
ஒரு கொலைகார நாட்டில்
இன்னும் வாழ்கிறோம்
ஆம் பேடிகள் நாங்கள்...!

கேடிகளை அரசாளவிட்டு
கோடிகளில் அவர்களை புரளவிட்டு,
பிச்சை கேட்க்கும்
பேடிகள் நாங்கள்..!!

உயிர் படகு ஏறி
உயிர் வாழ
மீன்பிடிக்க செல்லும்
மீனவ அண்ணனே...!
சுட்டு கடலில் வீசு எங்களை..
நீ சுடப்பட்ட நேரத்தில்
ஒரு திரை படத்திற்காக
வீதியில் இறங்கி போராடினோம்..
போராளி பேடிகள் நாங்கள்...!

வாழ்க்கைக்காக போராடும்
இடிந்தகரை உறவுகளே..
அணுஉலை கசிந்தால் என்ன..??
மக்கள் குருதி கசிந்தால் என்ன..??
காதல் கசிந்தால் போதும்
எங்களுக்கு..!
மின்சாரம் வந்தால் போதும்
எங்களுக்கு..!
இப்படிதான் சிந்திப்போம்
ஏன் என்று கேட்காதீர்கள்..
பேடிகள் நாங்கள்..!

மரண தண்டனை
விதிக்கப்பட்டு..
ஒவ்வொரு நாளும்
மரணத்தை வெல்லும்..
மும்மூர்த்தி சகோதரர்களே..
இந்தியா கிரிக்கெட்டில்
தோற்றதனால்..சோகத்தில்
உங்களுக்காக,,..
வாய்திறக்க முடியவில்லை எங்களால்..,
உங்களுக்கு தெரியாதா என்ன.?
பேடிகள் நாங்கள்..!

வீரதிருமகனின் வீர மகனே,
இனிப்புண்டு,
துப்பாக்கி குண்டுகளை.,
நெஞ்சம் நிமிர்த்தி,.
நீ சாய்ந்தபோது..
காதலர் தின கொண்டாட்டங்களில்
இருந்துவிட்டோம்..
பேடிகள் நாங்கள்...!!

இந்தியனாக இருக்கும்வரை
பேடிகள்தான் நாங்கள்..
ஆம் பேடிகள்தான் நாங்கள்
பேடித்தனம் விட்டு...மனிதனாவோம்
இன்று முதல்
இந்தியன் அல்ல நான் "தமிழன்"
தமிழனாவோம்..
"தலை நிமிரட்டும் தமிழன்"...!!!

- இளையபாரதி 

No comments:

Post a Comment