கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண்ணின் குமுறல்...
கை கோர்த்து
கண்கள் சேர்த்து
காதல் வளர்த்த நமக்கு...
நெஞ்சில் உரம் இல்லாமல்
போனதேனடா காதலா..?
விஷம் காட்டிய பெற்றோருக்காய்
விஷமான வாழ்கை ஏற்றேன்...
நம் காதல் கொன்று...
நம் காதல் நொறுக்கி
கண்கள் ஏறிய
இதயம் பொசிந்து...
என் கணவர் தாலி கட்ட
நான் ஏற்றது
வாழ்கையை அல்ல
வலிகளை...
கட்டியவன் நீ இல்லை
என்பதால்...!
பொசிந்த இதயத்தோடும்
கசிந்த புடவையோடும்தான்...
விடிந்தது
என் முதல் இரவு...!
வழி இல்லை வேறு..!
பிடிக்காத வாழ்க்கையானாலும்
பிடித்துதான் வாழ வேண்டும்
பெற்றோர் செய்து வைத்தால்
இதுதான் நம் நாட்டு
திருமண நீதி..!
பிடித்துவிடும் என்று
பிடி கொடுத்தாலும்
பிடிக்கவே இல்லை...எனக்கு...!
இது காதலின் நீதி...!
என்றும் உன் நினைவு..
எங்கும் உன் நினைவு..
எதிலும் உன் நினைவு...
உன் பெயர் நினைவு படுத்தும்
எதுவும் எனக்கு
உன்னை நினைவு படுத்துவதில்லை...
உன் நினைவு மட்டுமே...
எனக்கு அனைத்துமாய் இருக்கிறது....
பேருந்தில் தொங்கியபடி நீ...!
இருக்கையில் இருந்தே
உன்னை தாங்கியபடி நான்...!
வகுப்பில் என்னை
கவனித்தபடி நீ...!
பாடம் கவனிப்பதை போல்
உன்னை
கவனித்தபடி நான்...!
இப்படியான சுகங்கள்
காதலை தவிர
வேறு எங்கு கிடைக்க கூடும்..!
இன்னமும் நான்
சுவாசிப்பது...நீ
வெளியிடும் சுவாசம்
நான் சுவாசிக்கிறேன் என்ற
நம்பிக்கையில்....!
விஷம் காட்டி
பணிய வைக்கும்
எந்த பெற்றோருக்கும்
தெரிவதில்லை..
புரியப்போவதும் இல்லை...
காதலின் அருமை..!
யாருக்கு தெரியும்
உனக்காக நான்
கவி எழுதும் இந்த நொடி..
காதலிக்காக கடிதம்
எழுதிக்கொண்டிருப்பார்
என் கணவர்...!!!
மொத்தத்தில் யாரும்
யாருக்கும் சொந்தமில்லை...
யாரும் யாருக்கும்
உண்மையாக இல்லை..
இறுதிவரை
நடிக்கத்தான் வேண்டும்
இது "உலக நீதி"...!!!
- இளையபாரதி
No comments:
Post a Comment