ஈழ மண்ணில்
இன்பம் விதைக்க
ஈன்றவளையும் விடுத்து
இனமே எம் தமிழ் இனமே...
நீ வாழ
நான் வீழ்கிறேன்...என்று
தன் இனம் சுவாசிக்க
தன் சுவாசம் நிறுத்திய
மாவீரர்களுக்கு....
வீர வணக்கம் மட்டுமா...??
இதோ
என் "உயிர்" வணக்கம்...!
தலைவன் திசை காட்ட
தேசம் தனில் தமிழர்
கொடி பறக்க...
துப்பாக்கி காயத்திற்கு
செங்குருதி மருந்திட்ட..
புலி கூட்டத்திற்கு .
"உயிர்" வணக்கம்...
நயவஞ்சக நரிகளுக்கு
நாட்டை கொடாமல்
நரிகளை நடு நடுங்க செய்த
நாயகர்களுக்கு
" உயிர் " வணக்கம்..!!
தமிழினத்தை உச்சமென்று எண்ணி...
உயிரை துச்சம்மென்று எண்ணி..
தமிழ் ஈழம் மட்டுமே மிச்சம் என்று...
மகிழ்வாய் உயிர் துறந்த...
தமிழ் தெய்வங்களுக்கு...
"உயிர்" வணக்கம்...
தம்பி தங்கைகளை அழைத்து
அவர்கள் உடலில் இருக்கும்
ரத்தத்தை நெருப்பாக மாற்றி...
ஈழ முழக்கமிட்ட
வீர வேங்கை...
எம் தலைவனுக்கு...
" உயிர் " வணக்கம்...
ஒரு அரசையே
ஆட்டிப்படைத்து..
தனி அரசாங்கமே நடத்திய
அன்பு அண்ணன்.
மாவீரன்...
வீரன் என்பதன்
விரிவாக்கம்...
அண்ணன் " பிரபாகரன் "க்கு ....!
"உயிர்" வணக்கம்..!
ஈழ தாகத்திற்கு
நெருப்பை குடித்த...
தமிழர்களுக்கு...
"உயிர்" வணக்கம்...!
புலிகளை அழிக்க
பூனைப்படைகளா..??
பூமியே சிரிக்கும்...!
ஈழ மண்ணில்
சிதறிக்கிடக்கும்..
ஒவ்வொரு
துப்பாக்கி துகள்களும்
சிறுமை கொள்ளும்...
கோழை சுட...
ஒரு வீரனை
கொன்றேனே என்று...!!
வீரன் மார்பில்
சிக்கி கிடக்கும்
ஒவ்வெரு
துப்பாக்கி துகள்களும்
பெருமை பேசும்...
வீரன் மார்பில்
இறந்தேன் என்று...!!
உலகில்...
எந்த ஒரு நாடும்
பேசாத,பேசவே முடியாத
பெருமையை...
என் ஈழ நாடு பேசும்..
அதிகமான வீரர்களை
ஈன்றேன் என்று...!!!
எந்த மொழியும்
பேசாத பெருமையை
எம் "தமிழ்" பேசும்
" ஈழம் "...
என் நாடு என்று...!!!
ஈழ நாடு
துள்ளி குதிக்க...
சிங்கள நாடு
தொடை நடுங்க..
தலைவன் வருவான்
சிங்களன் கருவறுக்க..!!!
தமிழ் கூறும்
ஈழம் ஈன்ற
மாவீரர்களுக்கு
தமிழாய்
" உயிர் " வணக்கம்...!!!
- இளையபாரதி
No comments:
Post a Comment