Wednesday 20 June 2012




பிழைப்புக்கு பாதை தேடி
பட்டணம் வந்த
பரதேசிகளை ...!
பட்டைஇட்டு பகவான்
இவன்  என்று
பிதற்றுகிறீர்...!!!

பெண்ணிடம் சல்லாபம்
கொண்டாடுபவன் கடவுளாம்...!
"கதவை திற காற்று வரட்டும்"
என்று சொல்லி...
உள்ளே அழைத்து
கதவை பூட்டுபவன்
பிரம்மச்சாரியா..??

போதை போதனைகளை
கேட்க்கும் பேதை
மக்களே
பேடிகளை போற்றும்
புண்ணியவான்களே...!

புழுதியில் படுத்துறங்கியது
போதும் போதும்...!

கடவுள் என்பவன்
இருப்பானாயின்
அவனிடம் நாம்  பேச
போலி தூதர்கள் எதற்கு..??

நேரே நம்மிடம் பேசாத
கடவுள் எதற்கு..??

ஆன்மிகம் இன்று
ஆண்மிகமாகிவிட்டது..!!!

மனிதம் மறந்துவிட்டோம்
மனிதர்களையும் மறுத்துவிட்டோம்
மடையர்கள் போதுமென்று...!

காலப்போக்கில் அரசியல்வாதிகள்
கடவுளாக்கப்படலாம்..,
நடிகர்கள் அதற்க்கு
பூசாரிகலாகலாம்...
எப்படி ஆனாலும்
பேதை மக்களே
நீங்கள்
கடவுளுக்கு உண்டியலிலும்
பூசாரிக்கு தட்டிலும்
பிச்சை போட்டு கொண்டுதான்
இருப்பீர்கள்...!!!

அவர்களையே
வணங்கிக்கொண்டு
அதனால் நீங்கள்
வாழ்வதாக நினைத்துக்கொண்டு...!!!

                                          - இளையபாரதி








2 comments:

  1. Hi Barathi... By accident i came across your posting on "Ini oru Vidhi Seivom" FB page
    FOllowing that, i landed here to your blog.

    I should admit, your writings are of good class & keeps me nailed down.

    Congrats writer. Come out with flying colors.

    kSk

    ReplyDelete
  2. Thank you very much..! It need a honest and good heart to appreciate others..!!

    ReplyDelete