Friday 15 June 2012

"......நட்பு......"








நயவஞ்சகமும் நஞ்சும்
மிகுந்த மனங்களுக்கு
நடுவே...
நெஞ்சம் நிமிர்த்தி
தோள்கள் திமிர
நடை போடுகிறது
களங்கமில்லா
நட்பு...!

காதலி
இருந்தும்...
காதலுக்கும் மேல்
காதலிக்கிறார்கள்
நட்பை..!
காதலிகளுக்கு தெரியாமல்...!

ஒருவேளை மனிதனின்
ஆறாம் அறிவு
இந்த நட்பு தானோ..?

"நீரில்லா நெற்றிப் பாழ்" என்கிறது
ஒரு மதம்...
நட்பில்லா மனிதன்
நடை பிணம் தான் உறுதியாக...,

விலங்குகள் அஃறிணை
மனிதர்கள் உயர்திணை
நண்பன் உள்ளவன்
நட்புத்திணை..
உயர்திணையை விட
உயர்வானவன் என்று
"இனி ஒரு விதி செய்வோம்"


நண்பனுக்காய் உயிர் விட்டவர்கள்
இங்கு இல்லை,
காதலை போலே
உயிர் எடுப்பது அல்ல
நட்பு...
உயிர் காப்பது நட்பு...!

"நட்பு"
இதற்க்கு ஒரு
புது காவியம் எழுத
உலக காகிதங்கள் போதாது...!

நன்றி கூறினால் பிடிக்காது
நன்றி எதிர்ப்பார்தலும் ஆகாது
ஆனாலும்
நன்றி மறக்காது
இந்த "நட்பு"...

எதிர்பாராமல் வரும்,
எதிர்பாரா நேரத்தில் உதவும்
எதிர்பார்க்கா இன்பம்
தரும் இந்த "நட்பு"
எதையும் எதிர்பார்ப்பதில்லை
எவரிடமும்..!!!

தனித்துவிடப்படும் தருணத்தில்
தோல் கொடுத்து
தட்டிக் கொடுக்க
தோழனோ ,தோழியோ இருந்தால்
தோற்ற மனிதன்
உலகில் இல்லை..!!!

அன்பானவன்,பண்பானவன்
என்பதைவிட
நட்ப்பானவன் என்று
பெயரெடுப்போம்...
நட்பை வாழ...!!!

- இளையபாரதி
 

1 comment: