உழைப்பாளி..!!!
இவன்
இன்றி அசையாது உலகு
இவன் ஊன் சிதைத்து
முதலாளிக்கு
லாபம் கொடுக்கிறான்...
பாவம் இவன்
கனவில் மட்டுமே
வாழ்கிறான்.,
பிள்ளைக்கு படிப்பு வாங்க
இவன் ரத்தம் விற்கிறான்,
இவன் தேவை
என்னவென்று தெரியாதே
இவனுக்கு...
இவன் வாழ்வை
பலி கொடுத்து
பலரை வாழ வைக்கிறான்...!!!
குடும்பத்திற்கும்
நாட்டிற்கும்
வாழ்பவன் இவன்
இவன் வாழ்கையை
உழைத்தே கழிக்கிறான்
உழைப்பாளியை
உண்மையாய்
வணகுவோம்...
உழைத்திடுவோம்...!!!
உழைத்திடுவோம்...!!!
- இளையபாரதி
No comments:
Post a Comment