உனக்கானதொரு
உலகத்தை
என் உள்ளத்தில்,
எழுப்பி வைத்து
காத்து கிடந்தேன்,
கை கோர்க்க மறுத்தாய்,
என்னை கடந்து
போனாய்,
கடை விழி பார்வையேனும்
கிடைக்காதா என்று
யாசிக்கும் யாசகன்
ஆனேன் நான்..!
ஏந்திய என் கைகளில்
நீட்டினாய் உன்
அழைப்பிதழை,
விரைவில்
உனக்கு திருமணம்...!!!
அன்று
எனக்கு மறுஜென்மம்..!!!
உனக்காக
எழுப்பிய உலகத்தை
உன் கணவனிடம்
கொடுக்கிறேன்
அவர் உனக்கு கொடுப்பார்..!
மாற்றங்கள் செய்ய வேண்டாம்
என்று சொல்..!!!
உன் தாயை விட
உன் தனித்தன்மை
அறிந்தவன் நான்...
அந்த உலகத்தில்
நீ
விரும்பிய அனைத்தும்
இருக்கும்...
நம் காதலை தவிர..
நம் காதல் இல்லாத
இடத்தில்
எனக்கென்ன வேலை...???
உன் திருமணத்தோடு
மறித்துபோவேன் நான்..
ஆம்
உன் உற்றார்களுக்கும்,உறவினர்களுக்கும்,
நண்பர்களுக்கும்,
அங்கு இலைகளில்
பரிமாறப்பட இருப்பது
என் உயிர்...!!!
நீ
ஏற்கனவே ருசித்துவிட்டாய்
உன்
கணவனுக்கு
ருசிக்க கொடு
என் உயிரை...!!!
- இளையபாரதி
No comments:
Post a Comment