Friday 27 April 2012

கடவுள்..!!! யார் கடவுள்...???





கடவுள்..!!!

இருக்கிறாரா இவர்..?

கடவுள் இருக்கிறார்.!
அவர் எந்த மதத்தை,
சார்ந்தவராகவும் இல்லை
கடவுள்,
கடவுளாகவே இருக்கிறார்...!!!

நானும் பார்த்தேன்
கடவுளை...!!!

பேதம் இன்றி அனைவரையும்
ஏற்றி செல்லும்
பேருந்தில்...!!!

ஒரே மாதிரி
வழி கொடுக்கும்
சாலைகளில்..!!!

ஒரே நிறமாய் இருக்கும்
தண்ணீரில்...!!!

மனிதனாக மட்டும்
நம்மை பார்க்கும்
நம் நாட்டு
தேநீர் கடை
கோப்பைகளில்...!!!


கருங்களுக்கு
பால் ஊற்றி பூசாரி
அபிஷேகம் செய்கையில்
கீழ்வழியும் பாலை
கையில் பிடித்து
குடித்த அந்த யாசகன்
கண்டான்
பூசாரியில் கடவுளை...
பூசாரியோ கண்டார்
கல்லில் கடவுளை.!!!

உணவு கேட்ட,
சிறுவனுக்கு உணவு
கொடுத்து விட்டு
நான் விடைபெறுகையில்
"அண்ணா அங்க இருட்டா
இருக்கு பார்த்து போங்க "
என்ற அந்த சிறுவனிடம்
கண்டேன் நான்
கடவுளை..!!!

கடவுள்
இருக்கிறார் என்றால்,
யார் அவர்
ஏசுவா..?
சிவனா..?
அல்லாவா...?
இவர்கள் கடவுள் என்றால்...
கடவுளை
என்ன சொல்வீர்கள்..?

இங்கே தங்கத்திற்கு
கொடுக்கப்படும்
மரியாதை...,
நமக்கு பெரிதும் உதவும்
இரும்பிற்கு தருவதில்லை...!!!

கடவுள், பணம்
கடவுள் ஒரு கல்...
பணம் வெறும் காகிதம்..
இரண்டுமே
மனிதனால் மதிப்பு
கொடுக்கப்பட்டு...
மதிக்க படுபவைகள்...
ஒரு நாள்
மிதிக்கப்படலாம்...விரைவில்...!!!

கடவுள் இருக்கிறார்.!
அவர் எந்த மதத்தை,
சார்ந்தவராகவும் இல்லை
கடவுள்,
கடவுளாகவே இருக்கிறார்...!!!

அப்படியானால்
யார் கடவுள்...????

உனக்கு நீ
எனக்கு நான்...!!!

                                   - இளையபாரதி




No comments:

Post a Comment