********* குழந்தை தொழிலாளி ************
கொஞ்சம் நேரம்
ஒதுக்குங்கள்
எங்களைப்பற்றி சிந்திக்க,
கருத்தரிக்கும்போதே
கல் உடைப்பதர்ற்கு
என்று எழுதப்பட்டவர்களோ
நாங்கள்..???
இல்லை இல்லை...
கல் உடைப்பதற்கு
என்றே
பெற்றெடுக்க பட்டவர்கள்..!!!
பட்டாசு கொளுத்தி
பரவசம் அடையும்
நீங்கள்..!
சிந்தித்தது உண்டா..?
பட்டாசுக்கள் பூவாய்
வெடிப்பது...
எங்கள் புன்னகை என்று..???
கருகிக்கொண்டு இருப்பது
எங்கள் கைகள் மட்டுமல்ல...!!!
வாழ்க்கையும்தான்...!!!
நீங்கள் உண்டுபோன
மேசை துடைத்து
வாழ்கிறோம்..,
எங்கள் கண்ணீர்
துடைக்க விரல்கள் ஏது..?
கொஞ்சம் எங்களை
திரும்பி பாருங்கள்,
உங்கள் பிள்ளைகளின்
முகம் தெரியக்கூடும்..!!!
பிறக்காத
பேரன் பேத்திகளுக்காக,
அணு உலைக்கு
ஆட்சேபம் தெரிவிக்கிறீர்கள்,
தெருவோரம்
குப்பை பொறுக்கும்
எங்களை
குப்பையாகத்தானே
பார்க்கிறீர்கள்..!!!
துரித உணவகம்
தேடி ஓடும்
எங்கள் அன்பு மக்களே..!!!
எங்கள் துயர் துடைக்க
நீங்கள் வருவது எப்போது..?
பிறவியில் பார்வையற்றவனுக்கு
வண்ணங்களை
விவரிப்பது போலத்தான்
உங்களுக்கு
எங்கள் வாழ்கையை
புரிய வைப்பது...!!!
வாய் பேச முடியாதவன்
தன் கனவை
விளக்குவது
போலத்தான்,
எங்கள் வாழ்வை,
உங்களுக்கு விளக்க
நினைப்பதும்..!!!
துளி நம்பிக்கையில்தான்
கைகள் காய்க்க
வேலை செய்கிறோம்,
நாளை எங்கள்
பிள்ளைகள்
கல்வி கறப்பார்கள் என்று...!!!
- இளையபாரதி
No comments:
Post a Comment