Sunday 5 February 2012

நாம்,
தினமும்,
சந்தித்துக்கொண்ட
இடத்தை
மறக்க முடியாமல்,
தினம்,
ஒருமுறை சென்று,
அமர்ந்துவிட்டு தான்
வருகிறேன்,
தினமும் நம்மை
பார்த்த
"பூ" விற்கும்
சிறுமி சிரித்துகொண்டே
கேட்கிறாள்,

"என்ன அண்ணா
இப்பலாம் தனியாவே
வறீங்க..?.
"நீங்க,
அவங்க கூந்தலுக்கு
"பூ" வாங்கி
வச்சீங்க,
அவங்க உங்க
காதுல "பூ" சுத்திடாங்க போல"..?
கண்ணீரோடு,
நான் கூறினேன்
"அவ என் காதுல
" பூ " சுத்தலம்மா,
என் காதலுக்கு " பூ "
சுத்திட்டா...
அவ வாழ்க்கைக்கும்
சேர்த்து சுத்திக்கிட்டா..."
மெல்ல நகர்ந்தாள்
சிறுமி என்
தோல்களை தட்டிக்கொடுத்துவிட்டு
கண்ணீரோடு...!!!
                                   - இளைய பாரதி

No comments:

Post a Comment