! காதல்...காதல்....காதல் !
மனிதனாய்
இருப்பவனை
பித்தனாக்கும்,
பித்து பிடித்த
ஒரு நல்ல பேய்..!
நல்ல இதயத்தில்
கீரல்களையும்,
கீரிகிடக்கும்,
இதயங்களில்,
மருந்திடும்
மாய மருத்துவம்,
அனைவருக்கும்
பிடித்த,
அனைவரும்
சுவைக்க விரும்பும்,
பாதி உயிரை,
மட்டுமே கொல்லும்
ஒரு
இனிப்பான விஷம்,
பெற்றோரை
சில நொடிகள்,
எதிரியாக
பார்க்க வைக்கும்,
இதய சர்வாதிகாரி,
அவனுக்கே தெரியாமலும்,
அவளுக்கே தெரியாமலும்,
இருவரும்
கையொப்பம் இட்டுக்கொள்ளும்
அடிமை சாசனம்,
விழி அசைவிற்கு
ஒரு மொழி,
கூந்தல் அசைவிற்கு
ஒரு மொழி,
புன்னகைக்கு
ஒரு மொழி,
என பல
மொழிகளை
கற்க வைக்கும் காதல்,
அவனோ? அவளோ?
எதை செய்தாலும்,
ரசிக்க வைக்கும்...!
ஆனாலும் மெல்லியதொரு
கோபத்தையும்
உள்ளடக்கும் காதல்!
சேர்ந்திருந்தால்
சொர்க்கம்,
பிரிந்திருந்தால்
நரகம்,
சில நேரங்களில்
சேர்ந்தே இருந்தாலும்
நரங்கம் தான்,
ஊடல் கொள்ளும்
வேளைகளில்,
யார் முதலில்
பேசுவது?
என்ற திமிரையும் தாண்டி,
இருவரில்
ஒருவர் முன் வந்து
பேசிவிட்டால்,
மற்றொருவர்
" மன்னித்துவிடு "
என்று உளமார
அகங்காரம் விட்டு
கட்டி தழுவும் நொடி...,
ஆஹா...
காதலுக்கு நிகர் காதல் தான்....!
- இளையபாரதி
விழி அசைவிற்கு
ReplyDeleteஒரு மொழி,
கூந்தல் அசைவிற்கு
ஒரு மொழி,
புன்னகைக்கு
ஒரு மொழி,
என பல
மொழிகளை
கற்க வைக்கும் காதல்,
அருமைட ....