Thursday 22 December 2011

அடியே..!...கோபப்படாதே...!

அடியே..!
கோபப்படாதே...,
நீ,
கோபப்படுகையில்
உன்,
நெற்றி சுருங்குகையில்,
குங்குமம்,
உதிர்ந்து,
கீழே
விழுவதை
என்னால்
பிடிக்க முடியவில்லை,
"தெய்வத்தின் கழுத்தில்
சூடிய மாலை
மண்ணில் விழக்கூடாது"
என்றபோது,
குங்குமத்தை
மட்டும்
எப்படி
அனுமதிப்பது...?
அதனால்தான்
சொல்கிறேன்
அடியே...!
கோபப்படாதே...!
                     - பிரகாஷ் பாரதி

1 comment:

  1. கற்பனையின் வலியை உன் கவிதை வரிகளில் உணர்கிறேன் ....

    ReplyDelete